குழந்தை அழும் ! !
அழுவதால் நீ !
குழந்தையாக முடியாது ! !
பூ புன்னகைக்கும் ! !
புன்னகைப்பதால் நீ !
பூவாக முடியாது ! !
காற்று தழுவும் ! !
தழுவுவதால் நீ !
காற்றாக முடியாது ! !
நதி ஓடும் ! !
ஓடுவதால் நீ !
நதியாக முடியாது ! !
மழைத்துளி விழும் ! !
விழுவதால் நீ !
மழைத்துளியாக முடியாது ! !
வானவில் வளையும் ! !
வளைவதால் நீ !
வானவில்லாக முடியாது ! !
கம்பன் கவிசெய்தான் ! !
கவிசெய்வதால் நீ !
கம்பனாக முடியாது ! !
மாதிரியின் முகமூடியில் !
தன் முகவரி இழந்தவனே ! !
நில்! !
சூரியன் தனை உள்வாங்கித் !
தன் சுயம் இழக்காத !
நிலவைப் பார் ! !
கவனி ! !
மாதிரியைப் படி !
அதன் மாதிரி நீ !
ஆகிவிடாதபடி ! !
செல் ! !
மாதிரியைத் தொடர்ந்து அல்ல ! !
மாதிரியின் பாதைகளில் !
தொடர்ந்து... !
போலச் செய்து !
போலியாகி விடாதே ! !
மாதிரி !
சூரிய ஒளிகீற்றுகள் தான் ! !
அதில் !
உன் சுயமெனும் !
கண்களை இழந்துவிடாதே ! !
மாதிரியை !
உன் தோளில் வை ! !
மாதிரியின் தோளில் !
நீ சவாரி செய்யாதே ! !
ஏனென்றால் !
உன் சுவடுகள் !
தெரியாமல் போய்விடும் ! !
!
பாண்டூ ... !
சிவகாசி.
+91 98421-42192

பாண்டூ