சமுத்திரம் - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Photo by FLY:D on Unsplash

முத்துக்களை பதுக்கி !
முரண்பாடுகளை செதுக்கி!
பத்திரப்படுத்தியிருக்கிறாய்!
திருட்டுப் போகாத !
திமிங்கிலங்களை !
திரிய விட்டு விட்டு!
ஆமைபோல் ஊமையாய்!
ஆரணங்குகளின் மனதாய்!
ஆழமாய் ஒரு !
அழகான ஆபத்து நீ!
உன் மேற்புரத்தில் கப்பல்கள் !
அமர்ந்து கொண்டாலும்!
உயிரோடு எங்களை!
உட்பிரவேசிக்க!
தடை போடும் படை !
!
எங்கள் கொள்ளைக்காரர்களை!
தவிர வேறு!
எவரிடமும் எதுவும் இல்லை !
மறைத்து வைக்க!
ஆனால் உன்னில் !
நாங்கள் தெரிந்து!
கொண்டதை விடவும் !
தெரியாததுகளே அதிகம்!
என்றாலும் நீ!
அடுத்தவர் பொருளுக்கு!
ஆசைப்படாதவள்!
அதனால்தான் எங்களில்!
எவரை நீ உன் !
வெள்ளை வேனில் இல்லையில்லை!
வெள்ளை அலைகளால்!
கடத்தி இழுத்துச்சென்றாலும் !
பணம் கோராமல் !
பிணமாக வெளியேற்றுகிறாய்!
!
முன்போர் நாளில்!
இந்த மண்ணின் !
அடியடுப்பில் இயற்கை!
பற்றவைத்த பிரளயத்தீயால் !
நீபொங்கிய பொங்கல்!
எங்களில் பலரையே!
சுவைத்து விட்டது !
என்றாலும் நீ!
இனியொருதடவை அந்த!
சுனாமி பொங்கலை!
பொங்கி விடாதே!
உன் பொங்கலுக்கு முன்!
எங்கள் பொங்கல் எல்லாம் !
புஸ்வானமாகிவிட்டபோது !
இன்னும் மனதுக்குள்!
பொங்கிக்கொண்டிருக்கும் !
எங்கள் உறவுகள் !
இனியும் பொங்குவதற்கு!
பொங்கலென்று ஒன்று !
இல்லாமல் போகும்!
!
உன்னால் முடியுமானால்!
கொஞ்சம் உப்பை மட்டும் !
எங்கள் விழிகளுக்குள் !
சேமித்துவிடு போதும்!
சுகமான தண்ணீர் !
இல்லாது போகும்போது!
சோகமாகும் கண்ணீரின் !
உப்பைக் கொண்டாவது !
பொங்கிக் கொள்கிறோம்
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.