“ சோழக்காற்றில் சுழண்டது மேகம் - !
மேல் வானிலிருந்து கீழாயும், கீழிருந்து மேலாயும் !
என் நெஞ்சைப்போல் எம் வரலாற்றுப் பாதைகளைப் !
புரட்டியபடி! !
எம் சமுதாய முன்னேற்றப் நோக்கில் (இன்றைய) !
வரலாற்று சுவடுகள் பதித்ததெல்லாம் பூச்சியங்களே; - !
இலக்குகள் இன்றி இயக்கங்கள் முண்டியடித்து !
சண்டைகள் போட்டன தமக்குள்ளே: !
அண்ணனைக் கொன்ற தம்பி, !
தம்பியைக் கொன்ற அண்ணன் !
என்று தம் கட்டுக்கோப்புகளை மெச்சிய வண்ணம் !
யார் தம் மக்களை அடக்கியாள்பவரென்று; !
பல்லாங்குளியாட்டத்தில் வென்றவரிருக்க !
தோற்றவர் பல்லக்குத் தேடி பகைவரையும் அடைந்தனர்! !
மனிதம் இங்கு வாய், மூக்கு, கண், காதுகளுடன் !
பிணங்களின் மத்தியில் கல்லறையில் இல்லாத பிணங்களாய் !
உயிர்ப்பின் அர்த்தங்களைப் புதைத்தபடி! ” !
!
3-1992
மாலியன்