மே - 18, முல்லைவாய்க்கால்.. - வித்யாசாகர்

Photo by FLY:D on Unsplash

மே - 18, முல்லைவாய்க்கால் நினைவுதினக் கவிதை


தேச ஜாம்பவான்களே!
வாருங்கள்;!
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில்!
ஒரு விளக்கேற்றிச் செல்லுங்கள்;!
உம்மோடு -!
மனிதராய் பிறந்ததற்கு!
ஒரு விளக்காகவேனும்!
எறிந்துவிட்டுப் போகட்டும் எம்!
உறவுகள்!!
ஒன்று இரண்டு!
மூன்றேன்று சுட்டிருப்பானோ!
சிங்களவன்?!!!
சுடும்போது!
ஏதேனும் ஒரு குரல்கூடவா !
அவன் உறவை அவனுக்கு!
நினைவுருத்தவில்லை;!
போகட்டும்,!
நம் சமர் -!
எவனை கொல்வதுமல்ல!
ஈழம் - வெல்வது மட்டுமெனக் கொள்வோம்!!
இறந்த என்!
வீரர்களுக்கும்!
உறவுகளுக்கும்!
விளக்கேற்றி விளக்கேற்றி!
வைக்கிறேன்;!
கண்ணீர் அனைத்து அனைத்து!
விடுகிறது.!
உலகிற்கு எங்களின்!
இருட்டு மறைக்கப் பட்டு!
வெளிச்சம் மட்டுமே தெரிகிறது போல்!!
ஒவ்வொரு!
உறக்கத்தின் போதும்!
இமை விட்டு நீங்காத -!
பிணக்குவியல்களாய்!
முல்லைவைக்காலில் முடைந்துப் போன !
எம் உறவுகளின் அந்த பிரிவு -!
அந்த நாள் -!
அந்த கதறல்கள் -!
அந்த பொழுது -!
எனக்கு கடைசி நினைவாக!
இருந்துவிட்டாலென்ன!!
முட்கள் உடைந்து போன!
மீனுக்கு வருந்தும் இனம்..!
என் -!
வீர சமருக்கு துணை நிற்காது!
வருந்தியென்ன பயனென்று!
சபிக்குமோ நமை -!
விளக்கேற்றுகையில் -!
நம் மாவீரர்களின் ஆத்மாக்கள்!!
ஒரு லட்சமாம்!
இரண்டு லட்சமாம்!
கணக்கு சொல்கிறது செய்தி!
முல்லைவாய்க்காலில் இறந்தவர் பற்றி;!
கணக்கில் வராது இறந்து போன!
எத்தனயோ உயிர்களுக்கென்ன!
இன்னொரு பிறப்பையா திருப்பித் தந்துவிடுமிந்த!
தேசங்கள்????!
ஓஹோ; தமிழரை!
உயிர்கணக்கிலிருந்து !
தள்ளிவைத்துவிட்டார்கள் போல்!
சிங்களன் வெல்லும் வரை, பாவிகள்!!
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.