இயற்கை.. பூவும் நானும் - வித்யாசாகர்

Photo by FLY:D on Unsplash

இயற்கை.. பூவும் நானும்!
01.!
இயற்கை!
------------------!
இயற்கை;!
இறைவன் மறைந்து கொடுத்த கொடை;!
இயற்கை;!
தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை;!
விடையின் விளக்கம் சொல்கிறேன்!
சற்று காது கொடுப்பீர்களா???!!!!
வெளிச்சம் தந்ததால் இயற்கை!
சூரியக் கடவுளானது;!
தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை!
மழைதேவன்.. கடல்தேவியானது;!
பூமியின் இருப்பினால் விளைச்சளால்!
இயற்கை; பூமித் தாயானது;!
காற்றின் சுவாசத்தால் இயற்கை!
வாயுதேவன் ஆனது;!
பணத்தின் ஆளுமையால் மரம் கூட!
பணமும்; பணம் கூட லட்சுமியும் ஆனது;!
படிக்கும் படிப்பு; அறிவு; பகிர்தல்; கற்பித்தல்!
கலை கூட கலைவாணி ஆனது;!
வாழவைத்த இயற்கைக்கு!
வாஞ்சையாக நன்றி சொன்னால்!
கேடுகளும் தீருமென நம்பினோம்; நம்பிக்கை பக்தியானது;!
மரங்களின் பலனால்!
மண்ணின் உடைமையால்!
கற்களின் உரசலால், மறைப்பினால்,!
இயற்கை; மரத்திலும், மண்ணிலும், கல்லிலும்,!
நெருப்பிலும் கூட கடவுளானது!!
இவ்வளவு ஏன் -!
இயற்கைக்கு நன்றி சொல்ல!
எழுதுகோல் எடுத்தேன் -!
என் எழுத்து கூட கவிதையானது!!!
ஆயினும்,!
கடவுளை போற்ற மதத்தை படைத்து!
மதத்தின் பேரில் மதம் கொண்டோம்;!
கடைசியில் -!
கடவுள் பேராலேயே!
இன்று மனிதம் அழிகிறது.!
மனிதனிலிருந்து விலங்குவரை!
அழிக்கப் படுகின்றன;!
அழிவை திருத்தி!
மனிதன் உயிர்களை காக்க; மனிதம் காப்போம்!
இயற்கையை -!
வெறியின்றி வணங்குவோம்!
வெறியில்லா மனிதத்தில்;!
தெய்வீகம் இயற்கையாகவே பிறக்கும்!!
!
02.!
பூவும் நானும்!
-------------------------!
ஒரு பூவும் நானுமாகத் தான்!
பார்க்க எண்ணுகிறேன் வாழ்க்கையை!
ஆனால் பூ எனை வென்று தான் விடுகிறது;!
ஒரு நாள் முழுக்க வெளிச்சத்தை!
படிக்கிறது பூ,!
காற்றினை அணைத்து!
அன்பு செய்கிறது பூ,!
கடவுளிற்கே வாசனை கூட்டி!
சேவை ஆற்றுகிறது பூ,!
சிறு உயிர்களான ஈ வண்டு பட்டாம்பூச்சிக்கு!
தேனை உணவாக அளித்து பசி தீர்க்கிறது பூ,!
பூத்தாலும் அழகு தருகிறது!
காய்ந்தாலும் உரமாகிறது -!
ஆனால், நான் இனி தோற்கப் போவதில்லை!
பூ பூவாகவே வாழ்வதுபோல்!
நானும் நல்ல மனிதனாக வாழ்ந்து!
வெற்றி மலர்களாக திகழ்வேன்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.