கவிதையில் காதல் - வித்யாசாகர்

Photo by FLY:D on Unsplash

சொக்கவைக்கும் தமிழில்!
சொக்கித் தான் போனது காதலும்;!
சொக்கித் தான் போனேன் நானும்!
சொக்கவைத்தவள் அவள்!!
அவளொரு -!
மரத்த தமிழச்சி,!
அந்த மரத் தமிழச்சி பற்றிய கவிதையில்!
இதோ..யென் காதலிங்கே களம் கொள்கிறது..!
தெருவெல்லாம் நெட்டையாய் நின்ற!
பனைமரக் காலமது,!
வாய்ஜாலம் விற்று தண்ணீர் பிடிக்கும்!
ஒற்றைக் குட 'நீருக்கான பஞ்சமது,!
அந்தக் குழாயின் -!
வாயடிச் சண்டையில்!
கைகட்டி நின்றவளின் பார்வையிலிருந்து!
பூத்ததெம் காதல்.!
கண்களின் -!
காட்சிப் பிழைபோல் தெரிந்த உலகத்தை!
சற்று திருத்தி -!
என் ஆண்டைகளின் வீரத்தை!
போதித்தது காதலே.!
அதோ...!
சல் சல் சலங்கை ஒலியிட்டு!
பவனி வருகிறாள் அவள்;!
அவளின் கால் கொலுசு சப்தத்திலிருந்து!
கரையத் துவங்குகிறது என் மனசும் காதலும்!
அன்றெல்லாம் -!
அவளை காணும் தினமே - நான்!
வாழும் தினமென்றுக் குறித்துக் கொள்வேன்,!
கானாதப் பொழுதுகளை -!
கவிதைகளால் கிருக்கிச் செல்வேன்;!
அதில் -!
கவிதையில் - காதல் பூத்தது;!
காதலில் -!
அவளும் நானும் கரைந்தோம் கலந்தோம்!
காற்றில் நடந்தோம்!
கைவீசி போட்ட ஒய்யார நடையில்!
ஜாதியின் மதத்தின் கண்களில் குத்தினோம்!!
விழித்துக் கத்திய சமூகத்தை!
உடைத்துப் போட்டதெங்கள் காதல்.!
ஆம்;!
ஜாதிக்கு மதத்திற்கு தலைவிரித்தாடும்!
ஆட்டம் சொல்லி என்!
நேற்றைய தலைமுறையை ஒரு நூற்றாண்டிற்கு!
தட்டிவைத்ததிந்த சமுகமில்லையா?!
மனித உயிரின் உயிர்பயமில்லாது!
தன் சுயநல வெறியின் பசிக்கு!
என் இளைய சமுதாயத்து உயிர்களை!
தின்றதிந்த சமுகமில்லையா......?!
இதோ கைகோர்த்துக் கொண்டு!
கிணற்றில் வீழ்கிறோம்!
முடிந்தால் பிரித்துக் கொள் உன் ஜாதியை என்றோம்,!
வாய் பிளந்துப் பார்த்தது சமூகம்!
எண்களின் பிணத்தை!!
அதற்காக -!
இறந்து விட்டோமென்று நினைக்காதீர்........!
என் தம்பி காதலிப்பான்!
என் மகன் காதலிப்பான்!
என் மகள் கூட காதலிப்பாள்!
ஜாதி!
மதம்!
நாற்றமெடுத்துப் போகும்;!
மனிதம் காதலில் மிஞ்சும்; காதல்!
கவிதையாகும்!!
கவிதையில் காதல் பூக்கும்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.