நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம் - வித்யாசாகர்

Photo by WrongTog on Unsplash

I.!
நீ -!
காற்றில் அசைபவள் !
கிளையுரசி உடைபவள்!
விழுந்ததும் பறப்பவள் !
பயணித்துக் கொண்டேயிருப்பவள்;!
நான் நின்று !
நீ வருவதையும் !
போவதையுமே பார்த்திருக்கிறேன்;!
கணினி வழி தெரியும் !
கண்களிலேயே !
உயிர்திருக்கிறேன்;!
வாழ்வதை அசைபோட்ட படி !
உன்னையும்!
நினைத்துச் சிரித்திருக்கிறேன்;!
வாசலை !
பசியோடு திறக்கக் கேட்காமல் !
சந்திக்கவேக் கேட்டிருக்கிறேன்!
நீயும் சம்மதித்தாய் !
பேசினாய் !
பார்க்கிறாய் !
இருக்கிறாய்!
நீ !
இருக்கிறாய் என்பதில் மட்டுமே!
உயிர்த்திருக்கிறேன்..!
!
II.!
கைதொடும் !
உனதுணர்வு!
மின்சாரம் கொண்டது;!
பார்க்கும் தருணங்கள் !
யாவும் !
தவத்தை உடையது;!
பேசும் !
அவகாசமெல்லாம் !
பாக்கியத்தைப் பொறுத்தது;!
உனக்கான எல்லாமே !
எனக்குத் தலைமேல்!
கிரீடம் இருப்பதற்குச் சமம்!!
!
III.!
பேச்சில் !
பாதி மறைக்கிறாய்,!
பேசாமலே !
உயிர்த்தீ அணைக்கிறாய்,!
நேசத்தின் !
எல்லை விரிக்கிறாய்,!
நெருங்கி என் !
நிஜத்தை தொலைக்கிறாய்;!
காற்றில் !
பொம்மையும் பூவும் !
பரிசென்கிறாய் !
கடவுச்சொல்லினும் இரகசியமாகிறாய்;!
பேஸ்புக் !
டிவிட்டர்!
ஜி-பிலஸ்!
எங்கு பொத்தான்களைத் தட்டினாலும் உன் முகம் தெரியும், !
தெரியாத நாளிலென் உயிர்பிரியும்..!
IV.!
உனக்கானச் !
சொற்கள் !
மௌனத்தை அணிந்தவை;!
வார்த்தைகளைக் களைந்து !
இதயத்தை !
பார்வையால் அறுப்பவை;!
காத்திருப்பிலும் !
தவிப்பிலும் !
நினைவுகளால் வலிப்பவை;!
என்ன செய்ய !
உனக்கானச் சொற்களை?!
இதோ -!
எழுதாமலே விட்டுவிடுகிறேன் போ
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.