அரசி - வெளிவாசல்பாலன்

Photo by FLY:D on Unsplash

மௌனத்தைக்கடப்பதற்கு!
வழியென்ன சொல்!
ஒரு கேள்விக்கும் !
அதன் பதிலுக்குமிடையில்!
அந்தரித்துக் கொண்டிருக்கும் !
கனவுப் பூ!
தன் நிறங்களின் மீது வரைகிறது !
திவ்ய வாசனையோடான !
ஆயிரமாயிரம் கதைகளை!
படித்தறிய மனமிருந்தால் சொல்!
மொழிபெயர்க்கலாம் அந்த ரகசியத்தின்!
ஈரமூறிய அன்பின் ஆதர்;சத்தை!
ஒரு காலம் கரைகிறது!
இன்னும் எத்தனை பொழுதுகள் !
இந்தத் தோணி !
கரையிலேயே !
கட்டப்பட்டிருக்கும்!
அக்கரை போக இக்கரையில் !
காத்திருக்கும் ஒரு பயணி!
கரையில் !
தனிமரத்;தின் மேலே வெயில்!
கீழே !
குளிரூற்றும் நிழல்!
தோணியிலும் மரத்திலும் மாறிமாறிப்பறந்து !
காதல் பெருக்கும் சிறு பறவைகளைக்கண்டாயா!
அவற்றின் குதூகலத்தைப் பார்த்தாயா!
ஒரு ராஜ்ஜியம் !
உனக்காகவே காத்துக்கிடக்கிறது!
-- வெளிவாசல்பாலன்
வெளிவாசல்பாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.