ஆடலி - வெளிவாசல்பாலன்

Photo by Didssph on Unsplash

கொடிகொடிகொடி!
கொடியிடையாளே...!
உன் நடனத்தில் !
காற்றாகிறது உடல்!
கலையாகிறது பிரபஞ்சம்!
தாளமும் ஜதியும் சேர்ந்தெழ!
சுழல்கிறாய் நீ!
சுழலும் பூமியையும் விட !
வேகமாயச் சுழலும் !
உன்னைச் சுற்றும்!
துணைக்கோளாய்...நான்...!
கனவின் மயக்கங்களில் !
தொலையும் பொழுதில் !
பெருகும் சந்தோச நதியின் பிரவாகத்தில்!
காற்றாகிறது உடல்!
கனலாகிறது மனம்!
எது நிஜம் !
எது கனவு!
என்றறியாத்தவிப்பு !
இருளுமின்றி ஒளியுமின்றி!
அந்த வெளியில் கலைந்திருந்தது.!
ஏதென்றறியா அக்கணப்பொழுதில்!
எதையும் உணர முடியா நிலைமீது!
அனலாகக் கொதிக்கும் மனதோடு!
காத்திருந்தேன் !
வெளியேறவும் முடியாமல்!
விடை பெறவும் முடியாமல்...!
அந்த நாளைப்பரிசாக எடுத்து வந்தேன்.!
!
-வெளிவாசல்பாலன்
வெளிவாசல்பாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.