காயத்தில் காயம் - வே .பத்மாவதி

Photo by joel protasio on Unsplash

சீ என்று ஒதுக்கியது!
காயம் பட்டபோது!
தீக்காயம் வீரியம் புரிகிறது!
இப்பொழுது!
செங்காந்தாள் கைகள்!
கருஞ்சாம்பல் ஆனது!
திருமுகத்தில் தீவடு பட்டு!
திருமணம் ஆகாத தங்கை!
திருவள்ளுவருக்கு இல்லை போலும் !
தீயினால் சுட்ட வடு உள்ளாறும் என்றாரே!
குளிரூட்டப்பட்ட பேருந்தில்!
உயிரோடு தகனம் செய்யப்பட்டது!
குடைந்தையில்!
பள்ளிச்சாலைகள் குழந்தைகளுக்கு!
கொள்ளிச்சாலைகள் ஆனது!
மருத்துவ அறைகள்!
பிணவறைகளாய் மாறியது !
செய்திகளாக செறிக்கமுடியாமல் !
காட்சிகளாகி கண்களில் ஓடுகிறது!
கருகிய கைகைளை பார்க்கும்!
ஓவ்வொரு முறையும்!
கருகுகிறது மனது
வே .பத்மாவதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.