நானும் வாழாவெட்டி - வே .பத்மாவதி

Photo by FLY:D on Unsplash

நடப்பன ஊர்வன பறப்பன!
நகர்வன அனைத்துமே!
நீ உண்பாய் என்று சொன்னாயடா!
என் மனதையும் உண்டாய் !
சொல்லாமலே!
!
நீ பேசிக் கொண்டிருந்தாய்!
நான் மௌனம் சாதித்தேன்!
இடையில் எப்படி உன் உயிர்!
அனுப்பிய தூதஞ்சல்!
என் விழிக்கு எப்படி கிடைத்தது!
அது ரகசியம்!
!
நீ வாழ்க்கையை தொலைத்தேன்!
என்று சொன்ன அந்த!
வார்த்தையில் தான்!
நானும்!
வாழ்க்கையை தொலைத்தேன்!
!
எனக்கு பிடித்த!
எதுவுமே உனக்கு பிடிக்காது!
உனக்கு பிடித்தது போலே!
நடக்க என்னால் இயலாது!
இருந்தும் ஒரு பிடித்தம்!
இருந்தது உன் மேல்!
!
விரசம் இல்லா பார்வை!
விரல் பிடித்த விதம்!
விட்டுக் கொடுக்கும் வார்த்தை!
வெந்தணலாய் அளித்த காவல்!
இதை விட என்ன வேண்டும்!
ஒரு பெண்ணுக்கு ?!
!
இந்த உணர்வு!
என் வயது கோளாறு!
என்று சொல்லி!
ஒதுக்கிவிட!
உனக்கு ஒன்றும்!
அவ்வளவு வயதாகி விடவில்லை!
!
இந்த!
நொடி!
நானும் வாழாவெட்டி தான்
வே .பத்மாவதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.