நட்பின் வலி - தமிழ் ராஜா

Photo by Pat Whelen on Unsplash

காலங்கள் செல்லும் வழி!
என் காலோடு நான் செல்கையிலே!
வீதி மட்டும் வந்த உன் நட்பு!
என் விழியை நனைத்துப் போகையிலே!
கால் வலியும் தெரியலையே!
கன்னி உந்தன் நினைவினிலே!
முகம் சிவக்க சிரித்தநாட்கள்!
என் ஆயுள் முழுதும்!
என் நெஞ்சினிலே!
பழுகும் பொழுதும் படித்த!
உன் மனது!
பிரியும் பொழுதும்!
நெஞ்சம் மறக்கலையே!
பாசமென்றோ! நேசமென்றோ!!
பல பெயர் சொல்லலாம்!
ஆனால் நட்பொன்றே!
நம் உறவை அழகாகச் !
சொல்லும் வார்த்தை! இல்லை, வாசகம்!!
உன் பந்தம் எனக்கு!
ரத்த பந்த மின்றி ஒரு!
சகோதிரியையே நினைவுப்படுத்துகிறது!
சகோதிரியிடமும் நட்பையே நினைவுப்படுத்துகிறது!
பழைமை கொண்ட நம் நட்பில்!
உரிமையான உணர்வுகள்!
சில காலம் !
ஊஞ்சலாடியது உலக அனுபவம்!
எனக்கு...!
நட்பின் வலியை உணர்ந்தேன்...!
அந்த வலியும்!
நெஞ்சில் சுகமாகவே இருக்கு!
காலங்கள் செல்லும் வழி!
என் காலோடு நான் செல்கையிலே... !
!
--தமிழ்ராஜா
தமிழ் ராஜா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.