குற்றமுண்டா! உன்னைப் புகழ்வதிலே - தமிழ் ராஜா

Photo by Tengyart on Unsplash

சித்திரப் பெண்ணழகே ! உன்னை!
என் சிந்தையில் வைத்திடவே!
கண்மலர் பூத்தி டம்மா பாவையே!
பார்வை ஒருங்கிடவே !
என்னையே மனதில் வைத்தாய் !
என்னுடன் நினைவையும் சேர்த்து வைத்தாய்!
கண்ணிலே காதலையே கன்னியே!
என்னுள் ஏன் வைத்தாய் !
காலத்தின் வர்ணணையில் கன்னியே!
காதலின் சொல்லினிக்கும்!
வாழும் தீரத்தில் உள்ளதடி!
நம் காதலின் கண்ணியமே !
சேர்ந்து பிரிந்திடினும்!
பிரிந்து சேர்ந்திடினும்!
இருக்கும் பொழுதினிலே!
ஆன்மா இன்பம் களிக்குமடி !
சேர்ந்தப் பொழுதினிலே!
உன் அன்பு சாரம் புரியலையே!
உனை பிரிந்த காலத்தினிலே!
உனை தவிர யாரும் தெரியலையே !
சோகத்தின் ஆழத்திலே !
உயர்காதல் புரியுமடி!
அது காமத்தின் இன்பத்திலே!
ஊறி மகிழுமடி !
மனதில் பாட்டு உதிக்குதடி!
நீ என் பக்கமிருக்கையிலே!
அதனுள் இசையும் இணையதடி!
நீ என்னை விட்டுப் பிரிகையிலே !
உள்ளத்தில் குற்றமேதுவுமில்லை!
உன்னுடன் கூடி மகிழ்வதிலே !
ஊடலில் உனக்கு நிகருமில்லை!
குற்றமுண்டா! உன்னைப் புகழ்வதிலே.......... !
தமிழ் ராஜா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.