நீ - தென்றல்.இரா.சம்பத்

Photo by engin akyurt on Unsplash

சகியே..........!
ஏதோ ஒரு நினைவோடுதான்!
கவி எழுத துவங்குகிறேன்!
என்னையுமறியாமல்!
உன் பெயரை மட்டும்!
எழுதி முடித்து!
முற்றுப்புள்ளி !
வைத்துவிடுகிறேன்!
என் கவிதைக்கு.!
!
2.!
சகியே........!
உனைத்தவிர !
எல்லோருக்குமே!
புரிந்துபோனது!
எனது கவிதையும்!
காதலும்...!
3.!
சகியே........!
நீ !
இந்த ஒற்றை எழுத்து!
என்னவெல்லாம் !
செய்துவிட்டு போய்விட்டது!
என் இதயப்பரப்பின்!
எல்லா திசுக்களையும்..!
4.!
சகியே...........!
உன் நினைவுகளுடன்!
என் இரவுகள் விடிவதை!
நீ அறிவாயா......?
தென்றல்.இரா.சம்பத்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.