உனது சீற்றத்தை புரிந்திடுவார்களா ? - றஞ்சினி

Photo by engin akyurt on Unsplash

யாரும் நினைத்திரா ராட்சத அலைகளால் இழந்து !
நிற்கிறோம் எம் அன்பு உறவுகளை !
குழந்தைகள் பெண்கள் முதியோர் ஆண்களென !
பல்லாயிரக் கணக்கில் . !
!
இந்து சமுத்திர திவுகளெங்கும் !
மனித இறப்பின் அவலம் தொடர்கிறது !
ஆபிரிக்காவையும் விட்டுவிடவில்லை !
!
இது என்ன கொடுமை !
இலங்கை இந்திய கரைகள் தோறும் !
மிருகங்கள் போல மனித உடல்கள் !
அநாதைகளாக பல்லாயிரக் கணக்கில், !
அள்ளி அடுத்து புதைக்கும் நிலமை !
பார்த்து நிக்க இதயம் வலித்து கண்கள் நிறைகிறது !
!
போரினால் இழந்தோம் பல்லாயிரக் கணக்கில் !
அதையும் தாண்டி இயற்க்கையிடம் சிக்கி இறந்த உறவுகள் . !
யாரை நோவது யாரிடம் உரைப்பது !
இயற்க்கையே உனக்கு ஏன் இந்த சீற்றம் !
மனிதர்கள் உன்னை அழிப்பதனாலா !
மனிதர்கள் உன்னை வதைப்பதனாலா !
உன்னை பரிசித்து வல்லரசுகள் !
தம்மை பலம் செய்வதனாலா !
!
ஏழை மக்களின் உயிரை ஏன் பதிலாக கொண்டாய்!
இயற்கையை அன்னையின் சீற்றக்கணக்கில் !
இன்னும் எத்தனை அழிவுகள் உழதோ !
இனியாவது உன்னை !
உனது சீற்றத்தை மனிதர்கள் புரிந்திடுவார்களா !
!
Ranjini Frankfurt
றஞ்சினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.