திருமதி . தொலைக்காட்சி - றஹீமா-கல்முனை

Photo by Sven Finger on Unsplash

இப்போதெல்லாம்;!
உன்!
வழியனுப்புதல் இல்லாமலேயே!
என் பயணங்கள்!
தொடர்கின்றன.....!
எப்போது வருவேன் ????!
என!
என் மீதான!
காத்திருப்புகள் தொலைந்து!
நெடு நாட்களாயிற்று!
ஒன்பது மணிக்கப்பாலும்..!
இழுபட்டுக் கிடக்கும்!
இரவுச்சாப்பாடு!
பசிக்கிறது என்பேன்!
முக்கியமான கட்டம்!
முடித்து விட்டு வருகிறேன்!
என!
முணுமுணுப்பாய்..!!!!
பெருந்தொல்லை!
என - எரிந்து விழுவாய்!
இன்றேல்;!
திடீர்,மளீர்...எனும்!
உரத்த!
கரண்டிச்சத்தத்தோடு!
உணவு போடுவாய்....!
இதைவிடவும்...!
பட்டினி கிடந்தே!
சாதல் சுகம்...!
அழுவாய்...!
சீரியல் பார்த்தபடியே..!
சீரியசாய் அழுவாய்....!!!!
உசிர் உருகி!
ஊத்துண்டு போகுமெனக்கு....!
எப்போதாவது....!
சுவையாய் சமைத்திருப்பாய்!
இன்றைக்கு!
''பவர் கட்டோ ..''!
என சந்தேகம் வருகிறது...!
பேசிக்கொள்ள!
ஏராளம் இருக்கின்றன,!
தொலைகாட்சியை!
கத்தவிட்டு!
நீ!
மௌனமாகவே இருக்கிறாய்..!!!
எரிச்சல் தாளாமல்!
வார்த்தைகள்!
தடிக்க!
வழக்காடும்போது....!
நீ அழுது....!
முரண்பாடுகளோடு!
முடிந்து விடுகிறது!
நமது பொழுது....!
முரண்பாடுகள்!
இன்றியே நமது!
நாட்கள் சென்றிருக்கும்...;!
பேசாமல்_ஒரு!
தொலைகாட்சிப்பெட்டிகே!
நீ வாழ்கைப்பட்டிருக்கலாம்
றஹீமா-கல்முனை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.