கண்கெட்டபிறகு - றஹீமா-கல்முனை

Photo by FLY:D on Unsplash

நேரம் கெட்ட;!
நேரத்திலெல்லாம்!
வந்தமர்த்கிறாய்....!
நேருக்குநேராய்!!!
வேறேதென் மீதும்!
பிடிமானம் அற்று!
என்னையே எரிக்கிறாய்!!!!!
ஊரிடிந்து!
தலையில் விழுந்தாலும்!
விளங்காதுனக்கு!
என்மீதே!
ஊறிக்கிடக்கிறாய்!!!!!
கண்கெட்டுப்போகும் உனக்கு!
பார்வையோடு மட்டும்!
முடித்துவிட்டுப்போவதில்லை!
நீ......!
நடந்த சம்பாஷனைகளை!
ஊராரிடமும்!
வகுப்புத்தோழிகளிடமுமாய்......!
ஊரெல்லாம்!
உளரித்திரிகிறாய்!!!!!
ஹாக்....!
ப்தூ.........!
முகத்தின் மீது!
காறி உமிழும்-உன்!
பள்ளிக்கூடப்புதகங்கள்!!!!!
சட்டென்று ஒரு நாள்!
என் மீதான -உன்!
பார்வை அடங்கிற்று!
பரீட்சைப் பெறுபேறுகள்!
வந்திருந்தன......!!
நீ அழுதாய்...!!
சீரியல் பார்த்தபடி!
சீரியஸாய் அழுவாயே....!
அதைவிட அடிதிகமாய்!
அழுது வடித்தாய்!
யாரும் இல்லை!
ஆறுதல்சொல்ல!
நானும்வரவில்லை.....!
!
தொலைக்காட்சிப்பெட்டி!
என்கிற - என்!
பெயரைகூட!
மாற்றாமல்!
இன்னொரு சந்ததி!
மீதான -என்!
ஆக்கிரமிப்புத் தொடர்ந்திற்று.......!
நீ இன்னும் அழுது!
வடித்தபடி
றஹீமா-கல்முனை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.