கடலில் வந்த காதல் - ரசிகவ் ஞானியார்

Photo by Paweł Czerwiński on Unsplash

(அந்தமான் தீவு அருகே சுனாமியில் கரைதப்பிய ஒரு அகதிகள் முகாமில் ஏற்பட்ட ஒரு காதல் இது )!
என் தேவதையை !
எங்கிருந்து !
கடத்திவந்தாய் கடலே ? !
சுனாமியே! !
சுற்றியிருந்தவர்களையெல்லாம்... !
கால்பிடித்து இழுத்து சென்றாய்! !
எங்கிருந்தவளையோ... !
காதல் பிடித்து அழைத்து வந்தாய்! !
காதலித்தால் !
சமூகம் எதிர்க்கும் என்றா !
சமூகத்தை அழித்துவிட்டு... !
எங்களை காதலிக்க வைத்தாய்? !
தீவு தாண்டி வந்த !
வே! !
எந்த தேசத்தில் நீ இருந்தாலும் !
என்னைத்தான் சேரவேண்டும்; என !
கடவுள் கடலுக்கு !
கட்டளையிட்டுவிட்டானா..? !
கடல் பொங்கியதால்... !
காதல் தங்கியதா ? !
இல்லை நம்மில் !
காதல் தங்குவதற்காக... !
கடல் பொங்கியதா ? !
இன்றைய காதல்கள் எல்லாம் !
முடிவில் தத்தளிக்கிறது.. !
ஆனால் இங்கேயோ !
ஒரு !
தத்தளிப்பில்தான் காதலே !
அரங்கேறியிருக்கிறது! !
!
சுனாமியில்... !
காணாமல் போனவர்களின் பட்டியலிலே !
என் !
இதயமும்... !
இணைந்து கொண்டது! !
அலைகள் அடித்துப் போட்டதில் !
காயப்படட்டவர்களுக்கு மத்தியில்... !
நாம் !
காதல்பட்டிருக்கிறோமடி!. !
ஒன்றாய் இருந்தவர்களையெல்லாம்... !
பிரித்துவிட்டது! !
பிரிந்துஇருந்த நம்மை... !
ஒன்று சேர்த்துவிட்டது! !
சுனாமியே ! சொல் !
நீ !
காதலுக்கு எதிரியா? !
நண்பனா? !
அழுகின்றவர்களின் !
ஆறுதலுக்காக... !
எங்கள் காதலை !
நினைவுச்சின்னமாக்கிவிட்டாயோ? !
!
திருமணம்... !
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம்! !
இங்கே !
காதல்... !
சுனாமியால் நிச்சயிக்கப்பட்டது ! !
அழாமல் வாடி! - மீண்டும் !
அலைப்பக்கம் போவோம்! !
நம் !
இதயம் இணைத்த ... !
கடலில் !
கால்கள் நனைப்போம் வாடி! !
ஆம்! இப்பொழுது !
கடல் நமக்கு... !
கல்யாண பரிசு! !
- ரசிகவ் ஞானியார் !
துபாய்
ரசிகவ் ஞானியார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.