நல்லவன் நீ - புஸ்பா கிறிஸ்ரி

Photo by FLY:D on Unsplash

நினைவுகள் தடம்மாறிப் போவதனால் !
தாலாட்டிச் செல்லும் எண்ணங்கள் !
துயரங்களாய் மாறி !
மீளாத சோகத்தில் !
ஆழ்த்திச் செல்கின்றன.. !
அக்காவாக, தங்கையாக !
தாயாக, கேட்கிறேன் !
விட்டு விடு !
இந்த நாசமான காரியத்தை.. !
கொட்டிவிடு உன் !
இதயத்தின் பாசத்தை !
குடிக்காதே வெறிக்காதே !
ஒளித்து ஓரமாய் நின்று !
மறைத்து மற்றவரை மதியாது !
குடித்து குட்டிச் சுவராவதில் தான் !
உனக்கென்ன லாபம்? !
உலகம் தேடுகிறது நல்லவனை !
மாறிவிடு நல்லவனே! !
நீ நல்லவன் என்று தான் !
நானும் சொல்கிறேன் !
நாடும் சொல்லும் உன்னை.. !
திருந்திவிடு தம்பியே! !
தனையனே! அண்ணனே! !
தந்தையே! !
--புஷ்பா கிறிஸ்ரி
புஸ்பா கிறிஸ்ரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.