ஊசலாட்டம் - ப.மதியழகன்

Photo by Jr Korpa on Unsplash

மனவெளிக்குள்
ஏதோவொரு வெற்றிடம்
எதைப் போட்டு
நிரப்புவது அதை

இரு விளிம்பு
நிலைகளுக்கு மத்தியில்
என் மனம் ஊசலாடுகிறது

தவறுகளைத் திருத்திக் கொள்ள
கடந்த காலத்தில் நுழைய முடிந்தால்
நன்றாக இருந்திருக்கும்

காலில் முள் தைத்தாலும்
கண்கள் தான் அழுகிறது

சாலையோரத்தில் குடியிருப்பவர்களுக்கு
வானமே கூரையாக அமைகிறது

நேற்று தந்த முத்தத்தின் ஈரம்
இன்னும் காயவில்லை

உன்னைக் காணும் போதெல்லாம்
ஆனந்தத்தில் கண்கள்
பனிக்கிறது

ஒவ்வொருத்தருடைய முடிவும்
யாரோ ஒருவருக்காக நெருடலாக
அமைகிறது

உறக்கத்தில் மனக் குப்பைகள்
எரிகின்றன
உள்ளக் கோப்பை காலியாகிறது
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.