கடவுள் முகமூடி - ப.மதியழகன்

Photo by Jr Korpa on Unsplash

அழைப்பு மணி ஒலித்தது!
கதவைத் திறக்க மனமில்லாமல்!
படுக்கையில் கிடந்தேன்!
பிறரிடம் மன்னிப்பு!
கேட்குமளவுக்கு!
எந்தத் தவறும் இதுவரை!
செய்ததில்லை!
எதிர் நீச்சல் போடுபவர்கள்!
கரை சேர முடியாது என!
நான் இப்போது தான்!
புரிந்து கொண்டேன்!
சாக்கடையில் விழுந்த!
மழைத்துளி சந்தன மணம்!
கமழுமா!
பசி மயக்கத்தில் விழுந்தவனுக்கு!
ஆகாரம் தான் கடவுளல்லவா!
பாவம் செய்யய பயப்படுபவர்களை!
ஆண்டவன் சோதிப்பது ஏன்!
இம்சை செய்து மகிழ்பவர்கள்!
இறைவனின் குமாரரர்களாக!
பூஜிக்கப்படுவது விநோதமல்லவா!
அருளுக்கு பிரதிபலனாக!
ஏதாவது எதிர்பார்த்தால்!
அவன் கடவுளா!
வாழ்விக்க உன்னிடம் வேண்டவில்லை!
குப்பையாக வந்த உடம்பை!
ஆராதனை செய்பவன்!
பிரபஞ்சத் தலைவனா!
மோகத்தை வெல்ல!
முடியாதவனுக்கு பெயர்!
தாயுமானவனா?!
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.