விரைந்து வா - பிரான்சிஸ் சைமன்

Photo by Tengyart on Unsplash

அன்று….நள்ளிரவு !
உலகின் கவனம் முழுவதும்!
உன் மேல்…2008 –ன் மாமனிதன் நீதானே!
இருக்காத பின்னே!!
என்னக் கூறப்போகிறாய்!
என்னச் செய்யப் போகிறாய்,!
உன் வாக்குறுதிதான் என்ன என்று!
இவ்வுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது!
அன்று !
“பிராவுன்” கொடுமையில் பாடுப்பட்ட யூதர்களை!
விடுவிக்க வந்த “மோயீசனை” போல்!
இன்று!
இராவணணின் “இன அழிப்பு” வேட்டையை!
தட்டிக் கேட்க வந்தவன் “நீ” என்று!
…………என் ஆழ்மனம் பறைச்சாற்றிக்கொண்டிருந்தது!
உன் உதட்டினிலிருந்து வெடித்த ஒவ்வொரு வார்த்தையும்!
அரசியல் நரிகளின் இரத்த வெறிக்கு பலியாகிக்கொண்டிருக்கும்!
எம் மக்களுக்கு புத்துயிர் கிடைக்க வித்திட்டது!
ஆனந்தத்தில் இலயத்துப்போயிருந்தேன்!!!!
இரு விரல்கள் கொண்டு!
கண்ணத்தை லேசாக கிள்ளி பார்க்கிறேன்!
“வலி” நான் நிஜ வாழ்க்கையில்தான் இருக்கிறேன்!
உறுதிப்படுத்தியது!
உன் வார்த்தைகள் நிஜமானவை!
உன் வாக்குறுதி உறுதியானவை!
என் எண்ணங்கள் ஞாயமானவை!
என்று இவ்வுலகிற்கு உறுதிப்படுத்த!
நீ விரைந்து வருவாய் என!
என் தமிழினம் காத்துக்கொண்டிருக்கிறது!
!
தூக்கத்தை பறிகொடுத்து !
உன் பேச்சுரையில் மயங்கிக் கிடந்த!
கோடிக்கனக்கான மனித மந்தையில்!
நானும் ஒருவன் என்று !
கூறிப் பெருமைப்படுவதா இல்லை வெட்கப்படுவதா என்று!
எனக்கு தெரியவில்லை…..உன் வருகை பதில் சொல்லட்டும்!
இப்பொழுது நான் தூங்க விரும்புகிறேன்!!!!
!
-பிரான்சிஸ் சைமன்!
பினாங்கு, மலேசியா
பிரான்சிஸ் சைமன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.