சுனாமிக்கு ஓர் அஞ்சலி - பாண்டூ

Photo by engin akyurt on Unsplash

கணபதியே! கணபதியே! கணத்த கணபதியே! !
கடலிலே கரைச்சதாலே கடலும் பொங்கியதோ !! !
பொங்கலும் வருகுதுனு மார்கழி முடியுதுனு! !
பொங்கலோ பொங்கலென கடலும் பொங்கியதோ!! !
மழையா நீயழுதா மகிழ்ச்சி ஊருக்கெல்லாம்! !
அலையா நீசிரிச்ச அழுதோம் நாங்களெல்லாம்!! !
மூழ்கிய பேருக்கெல்லாம் முத்த நீகொடுத்த! !
முத்தான சொந்தங்கள ஏன் நீ மூழ்கடிச்ச!! !
கடும்விஷம் உனக்குளுண்டு கதையில் கேட்டதுண்டு!!
கக்கிய நஞ்சையின்று குடிக்க ஈசன்வல்ல!! !
உப்பாய் கரிச்சாலும் உறவுடன் கலந்திருந்தோம்! !
உப்பாய் எங்களது உயிரையும் கரைத்தாயே!! !
அஸ்தி கரைக்கவே ஆழ்கடலே வந்திருந்தோம்! !
ஆளையே கரைத்தயே யாரிடம் போய்ச்சொல்வோம்!! !
உணவுக்கு கடலம்மா உன்னைத்தான் நம்பியிருந்தோம்! !
உணவாய் எங்களையே உண்டதும் ஏன்தானோ!! !
கடலம்மா உன்மடியில் கரையில் கிடந்தோமே! !
கரைசேர்ப்பாய் என்றே கனவுகள் சுமந்தோமே!! !
இரைச்சலோடு வந்தே இரையாக்கிப் போனாயே! !
உரிமையோடு வந்தே உணவாக்கிப் போனாயே!! !
சூரியோதயம் பார்க்கவே வழ்ந்துதான் இருந்தோமே!!
அஸ்தமனம் ஆக்கியே ஆகாதவனாய்ப் போனாயே!!!
மூழ்கிய சூரியனும் முழுதாய் காலைவரும்! !
மூழ்கிய வாழ்க்கையையும் மனிதம் மீட்டுத்தரும்!! !
!
------------------------------------- !
பாண்டூ !
ஸ்ரா சக்தி கணபதி டிரேடர்ஸ் !
6 ஜவுளிக் கடைத் தெரு !
சிவகாசி - 626 123 !
தமிழ் நாடு. !
செல்லிட பேசி : 98421-42192
பாண்டூ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.