சாமி(யார்)? - பாண்டூ

Photo by Steve Johnson on Unsplash

அமைதி முகம்
அருளும் கரம்
நவீன வியாபாரத்தில்
இது தனி ரகம் !

இந்த அவதார உலா...
கடவுளின் கடாட்சத்தாலா?
இல்லை
கயவர்களின் கைங்கரியத்தாலா?

இவர்கள்...
அவதரிக்கும் போதெல்லாம்,
அதர்மம் தலைதூக்கும்!

ஆசிர்வதிக்கும் போதெல்லாம்,
அஞ்ஞானம் அருளப்படும்!

தலையாட்டினால் பக்தன்...
கேள்வி கேட்டால் பித்தன்...
நல்லதென்றால் அவன் செயல்...
அல்லதென்றால் இவன் விதி...
இவர்கள் பிழைப்பிற்கு,
இதுவே நல்ல வழி ?!


இவர்கள்...
பற்றற்றவர்கள்...
அதனால்தானோ
வரவை மட்டுமே பார்க்கிறார்கள்!

இவர்களது ஆசிரமங்கள்
கருப்புப் பணத்தின்
காக்கைக் கூடுகள் !

ஏழு சக்கரங்களைப் பற்றி சிலாகித்தாலும்..
இவர்களது இறுதிக்காலம் என்னவோ
சக்கர நாற்காலியில்தான்...

தீராத நோயெல்லாம் 'சத்ய'மாய்
தீர்ப்பார்கள்...
இவர்களுக்கொன்றென்றால்
அவசரப் சிகிச்சைப் பிரிவில்
சேர்ப்பார்கள் !


இவர்களது ஆனந்த அலைகள்
மன்மத வளையங்களை
எழுப்பத் தவறுவதே இல்லை !

'நித்ய' கண்டத்திலிருந்து
தப்பித்தோர்க்கே வெளிச்சம் !

மனிதக் கண்களில்
மிளாகாய்ப் பொடித் தூவும் இவர்களால்...
கேமராக் கண்களிலிருந்து
தப்ப முடிவதில்லை !

இவர்களா நமக்கு
வாழும் கலையை
போதிப்பது ?

பக்தர்களே!
உங்களுக்கு பட்டை நாமம்
'பாபா'க்களுக்கோ கொள்ளை லாபம்!

கால் கழுவக்கூட
காசு வாங்கும் இவர்களைக்
கை கழுவுங்கள் !

உதிர்ந்த மயிரைக் கூட
இவர்களால் ஒட்டவைக்க முடியாது
உணருங்கள் !

விழித்திருங்கள்...
இதுவே சிறந்த தியானம்!
விவேகானந்தரின் விவேக மொழி !

இனியாரும்,கண்களை மூடச்சொன்னால்...
காதுகளை மூடுங்கள்!
முடிந்தால்...
ஆசிரமங்களையும்
பாண்டூ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.