நான்குமணிக் கவிதை - நீச்சல்காரன்

Photo by Freja Saurbrey on Unsplash

வார்த்தைகள்!
இடைமறிக்கப்பட்டு!
இனம்காணும்!
பொழுதில் எங்கோ!
உதிக்கும் கற்பனை.!
தூக்கத்தைத் தியாகம்!
செய்து!
அதில் கவிதைகளை!
ஒத்திகை பார்க்கும்!
கவிஞன்...!
இவ்வாறுயிருக்கையில்!
உறக்கத்தில் பறிபோன!
எண்ணக்காட்சிகள்!
வார்த்தை வடிவம்!
பெறும்முன்னே!
கனவாகிவிடும்!
அந்த சாமத்தில்!
வார்த்தைகள்!
பரிமாறப்பட்டு!
கொள்ளும்!
வள்ளுவனுடனும்!
பேசலாம்..!
விரட்டிவந்த கேள்விக்கு!
தீணி கிடைத்துவிடும்!
பேனாக்களில்லாமல்!
நெஞ்சில் தைக்கும்!
கவிதைகள்!!
சிறைபட்ட கருத்துக்களை!
பொறுக்கி!
சிந்திக்கையில்!
அதிகாலை நான்குமணி
நீச்சல்காரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.