தனிமையின் பிடியில் - மதியழகன் சுப்பையா

Photo by FLY:D on Unsplash

மதியழகன் சுப்பையா !
மும்பை !
ஒன்று !
புத்தகங்களை !
புரட்டியாயிற்று !
தொலைக்காட்சியின் !
அலைவரிசைகளையும் !
அலசியாயிற்று !
நான்கைந்து முறை !
தேனீர் குடித்தாயிற்று !
கோட்டோவியத்தில் !
உருவம் எழுத !
முயற்சித்தாயிற்று !
இறுதியாய் !
கவிதை எழுத அமர்ந்தேன் !
வெறுமை நீங்கி !
இருமையாகிப் போனேன். !
இரண்டு !
கிறுக்கல்கள் !
கிழிசல்கள் !
சிதிலமடைந்த சுவர்கள் !
ஓவியப் பரப்பாய் விரிகிறது. !
சிறிய அசைவுகள் !
நிச்சய விணைகள் !
அற்ப பொருட்கள் !
உன்னத இசையாய் !
ஒலிக்கிறது. !
தட்டப் படாத கதவு !
ஊமையான தொலைபேசி !
வெளிச்சமில்லா வீடு !
அடிக்கடி திறந்து !
மூடப்படுகிறது !
கழிப்பறையின் கதவு. !
மூன்று !
இன்று காலை !
பேரூந்தில் பார்த்தவள் !
தொடங்கி !
பட்டியல் முடிந்து போகவே !
தளர்ந்த நடையுடன் !
வண்ண அட்டை !
வார இதழ் தேடுகிறேன் !
உருவங்கள் வேண்டி. !
நான்கு !
ஒற்றை பிம்பம் காட்டி !
அலுத்துக் கொள்கிறது !
நிலைக் கண்ணாடி. !
இளையராஜாவின் !
இசையில் பிசிரடிக்கிறது. !
ஆயுள் தூக்கம் !
தூங்கியாயிற்று. !
புழுங்கி நாறுகிறது !
உடலும் உடையும். !
சுவர்கள் நெருங்க !
பரப்பு குறைகிறது. !
காற்று வரவே !
கதைவை திறந்தேன். !
கூறை அகற்றினால் !
ஒளியும் வருமே. !
ஐந்து !
எலிகளுக்கு !
விசம் வைப்பதில்லை. !
ஒட்டடை அடித்து !
காலங்களாகி விட்டது. !
கரப்பான்களுக்கும் !
பாட்சைகளுக்கும் !
மருந்து தௌ¤ப்பதில்லை. !
கொசுவத்திகள் !
கொளுத்துவதே இல்லை. !
ஆனாலும் !
எப்பொழுதாவது !
வாசல் வழி !
எதிரொளி மட்டுமே !
எட்டிப் பார்க்கிறது
மதியழகன் சுப்பையா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.