அவளும் மல்லிகையும் - மதியழகன் சுப்பையா

Photo by FLY:D on Unsplash

வாங்கிச் சென்ற !
மல்லிகைப் பூவை !
வேண்டாம் என்ற போது !
ஏன்? என்று கேட்க வில்லை !
வீசி எறிந்து !
கோபப்படவில்லை !
கசங்காமல் வீட்டிற்கு !
எடுத்துச் செல்வது பற்றி !
சிந்தித்திருந்தேன் !
அடுத்த சந்திப்பின் போதும் !
மல்லிகையுடன் வருவேன். !
------------------------------- !
* !
ஜாக்கெட் ஊக்கை !
மாட்டிக் கொண்டிருந்த !
உன் கைகள் !
உதிர்ந்த மல்லிகைகளை !
பொறுக்கிய என் கைகளை !
தட்டி விட்டது !
காரணம் சொல்லாமல் !
அப்படி செய்யக் கூடாது என்று !
பாவாடை நாடாவை இறுக்கினாய் !
ஆனாலும் !
வாசனை மூளையிலும் !
மல்லிகை புத்தகத்திலும் !
பத்திரமாய் இருக்கிறது. !
------------------------------ !
* !
ஒரு முறை !
தலை மணக்க !
மல்லிகை சுமந்து வந்தாய் !
கை கனக்க !
மல்லிகை சுமந்து நானும் !
இன்னொரு முறை !
வெறுங்கூந்தலோடு !
வந்திருந்தாய் !
கையும் பையும் !
வெறுமையாய் நான். !
--------------------------- !
* !
இன்றைக்கு !
வேண்டாமென !
உதட்டில் பூசிய !
என் எச்சிலை துடைத்தாய் !
காரணம் கேட்டதற்கு !
தலையில் கொத்தாய் !
மல்லிகை காட்டினாய் !
வீட்டிற்கு தூரமென !
என்னையும் !
தூரம் வைத்தாய். !
--------------------------- !
* !
உன் மீது !
சவாரி செய்ய !
நான் வாங்கி வரும் !
பயணச் சீட்டுதான் !
மல்லிகைச்சரம் !
எனக் கிண்டல் செய்வாய் !
என் இடுப்பில் அமர்ந்த படி. !
----------------------------- !
* !
கட்டிலெங்கும் !
மல்லிகை பரப்பி !
மல்லாந்திருந்த உன் !
யோனி முகர்ந்து !
முத்தமிடுகையில் !
மல்லிகைக் காடானது !
மனசு
மதியழகன் சுப்பையா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.