தூக்கு மேடையில் வைக்கப்பட்ட வாக்கு மூலம் - கருணாகரன்

Photo by FLY:D on Unsplash

எனக்கு !
சாட்சியங்களில்லை!
நிம்மியுமில்லை!
இதோ!
எனக்கான தூக்கு மேடை!
இதோ எனக்கான சவுக்கு!
நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும் !
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது!
இன்னும் நேரமிருக்கிறது!
இன்னும் நேரமிருக்கிறது!
உண்மையைக்கண்டறியுங்கள்!
தயவுசெய்து கண்டறியுங்கள்!
அதன்பிறகு !
என்னைப்பலியிடுங்கள்!
அதற்காக நான் மகிழ்வேன்!
உண்மைக்காக என்னைப்பலியிடத்தயாராக இருக்கிறேன்.!
!
அதுவரையில் நான் சாட்சியாக!
இருக்க விரும்புகிறேன்!
!
நல்ல நம்பிக்கைகளை!
உங்களிடம் சொல்வேன்!
எதுவும் பெரியதில்லை!
எதுவும் சிறியதுமில்லை!
!
நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை!
எந்த விசமும் படர்ந்ததில்லை !
என் நிழலில்!
!
உண்மையைக் கண்டவன் !
அதைச் சொல்லாதிருப்பது !
மாபெரும் பாவச் செயலாகுமல்லவா!
தண்டனைக்குரிய தல்லவா!
!
எனவேதான் உண்மையைச் சொன்னேன்!
பாவங்களும் தண்டனையும்சேராதிரக்கும்படியாக!
அதையே நான் செய்தேன்!
அதையே நான் செய்தேன்!
இதில் உங்களுக்குண்டா பேதங்கள்!
!
நான் உங்களில் ஒருவன்;!
அன்பின் கூக்குரலை!
நான் ஒலித்தேன்!
நாம் தோற்கடிக்கப்படலாமா!
என்னைக் கோவிக்காதே!
என்னைக்கோவிக்காதே !
!
நான் சொல்வதைக்கேளும்!
நான் சொல்வதையும் கேளும்!
!
உண்மைகளை நாம் ஒரு போதும்!
அழியவிடலாமா!
உண்மைக்குச் செய்யும் அவமானம் !
நம்மைத் தூக்கு மரததில் நிறுத்தும்!
!
நமது நாக்குக்கசக்கிறது!
நமது கால்கள் வலிக்கின்றன!
நமது வயிறு கொதிக்கிறது!
!
என்ன செய்ய முடியம்!
அவற்றுக்கு!
மன்னிப்பா!
ஆறுதலா!
தண்டனையா!
!
காலத்திடம் சொல்லு!
இன்னும் இன்னுமாய்!
--கருணாகரன்
கருணாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.