கேள்வி - கண்ணப்பு நடராஜ்

Photo by Yender Fonseca on Unsplash

மொட்டின் சத்தம்!
இதழ்களில்!
கேள்வியாய் வெடித்தால்தான்!
இயற்கையின் இயல்பே அர்த்தப்படும்...!
மலர் பிறப்பைப் பத்திரப்படுத்தி!
தொடர்ந்து வரும் வித்தில்!
கேள்விகளை விதைப்பதால்தான்!
முளைகள் கேள்விக்குறியாயின..!
கேள்விக்கும்!
முளைக்கும் வித்துக்கும!
மூளைமனிதன் போட்ட முடிச்சு இது..!
--கண்ணப்பு நடராஜ்
கண்ணப்பு நடராஜ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.