என் பழைய மொழி - கலீல் கிப்ரான்

Photo by FLY:D on Unsplash

நான் பிறந்து !
மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. !
நான் தொட்டிலில் இருந்தபடி !
என் புதிய உலகத்தை !
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் !
பார்த்துக் கொண்டிருந்தேன்.. !
என் அம்மா, !
செவிலித் தாயிடம் கேட்டாள்.. !
எப்படி இருக்கிறான் என் மகன்..?? !
அவள் சொன்னாள்.. !
ரொம்ப நன்றாக இருக்கிறான்.. !
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்.. !
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான் !
இதுவரை கண்டதேயில்லை.. !
எனக்குக் கோபம் வந்தது.. !
நான் கத்தினேன்.. !
அம்மா.. அது உண்மையில்லை.. !
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது.. !
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது.. !
அவள் மார்பகங்களின் வாசம் கூட !
எனக்குப் பிடிக்கவேயில்லை.. !
நான் மகிழ்ச்சியாய் இல்லை.. !
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!! !
ஆனால் என் அம்மாவுக்கோ, !
என் செவிலித்தாய்க்கோ !
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை.. !
ஏனென்றால் நான் பேசிய மொழி, !
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது.. !
இந்தப் புதிய உலகத்தில் !
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை.. !
இருபத்தியோரு நாட்கள் கடந்ததும் !
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது.. !
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி !
என் தாயிடம், !
நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே.. !
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.. !
என்றார்.. !
நான் ஆச்சர்யத்துடன் அவரிடம், !
அப்படியென்றால் !
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய் !
துக்கப்பட வேண்டுமே.. !
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!! என்றேன்.. !
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை.. !
ஏழு மாதங்கள் ஆன பிறகு, !
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து !
என்னைப் பார்த்து என் தாயிடம், !
உங்கள் மகன் !
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்.. !
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.. என்றான்.. !
நான் கோபத்துடன், !
தலைவனெல்லாம் க முடியாது.. !
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்.. !
வேறு எதுவும் ஆக மாட்டேன்.. என்று கூக்குரலிட்டேன்.. !
ஆனால், அந்த வயதிலும் !
என் மொழி யாருக்கும் புரியவில்லை.. !
இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள் !
கழிந்த பிறகு !
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி !
எல்லோரும் இறந்து போய் விட்டனர்.. !
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்.. !
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்.. !
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது !
அவன் சொன்னான்.. !
நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று !
எனக்கு அப்போதே தெரியும்.. !
நீ குழந்தையாய் இருந்த போதே !
நான் கணித்துச் சொன்னேன்.. !
என்றான்.. !
நான் அவன் சொன்னதை நம்பினேன்.. !
ஏனென்றால், !
இப்போது !
என் பழைய மொழியை !
நானே மறந்து போயிருந்தேன்..!! !
----!
மொழிபெயர்ப்பு மீனாட்சி சங்கர்
கலீல் கிப்ரான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.