புத்தனின் புதுமொழி - கலாநிதி தனபாலன்

Photo by Paweł Czerwiński on Unsplash

நேற்று !
சாந்தன் பிறந்து !
சாத்வீகம் பகின்றான்-அவன் !
போதனை வழியால் !
பௌத்தம் பிறந்தது !
இன்று !
பௌத்தத்தின் !
பாதுகாவலர் தாமெனச் !
சொல்லிய சிங்களம் !
கௌதமன் !
கண்ட கனவை !
கடந்து போகும் !
ஒவ்வொரு கணங்களிலும் !
கங்கணம் கட்டியே !
கலைத்த சிங்களம் !
குருதியும் அகந்தையும் !
கொடூரமும் கொலைவெறியும் !
கொண்டு நின்ற சிங்களம் !
சித்தார்த்தனின் !
சிந்தனைச் சிறகுகள் !
தாமெனச்சொன்னது !
சிரிக்க முடியவில்லை! !
சிங்களத்திற்கு !
புத்தனும் போதிமரமும் !
புத்தகமாயின !
புரிந்துகொள்ளமுடியவில்லை! !
நாளை !
மீண்டும் !
புத்தன் பிறந்தால் !
புழுவாய் துடித்து !
புழுதியில் புரண்டு !
புதைகுழி புகுவான் !
ஒருக்கால் !
புதைகுழி விட்டுப் !
புத்தன் எழுந்தால் !
போதனை செய்யான் !
புதுமொழி பகர்வான் !
புறப்படு போருக்கென்று! !
கலாநிதி தனபாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.