கற்பனையில் வாழ்வு.. உறவு - கலாநிதி தனபாலன்

Photo by Maria Lupan on Unsplash

01.!
கற்பனையில் வாழ்வு!
-----------------------------!
ஊனின்றி உறக்கமின்றி!
உள்ளதையும் தொலைத்துவிட்டு!
நிசத்தினையும் நினைக்காது!
நினைப்பினிலே வாழுகின்றார்!
நித்திரையும் இவர்க்கில்லை!
நிமித்திகர் சொன்னதையே!
நிசமென்று நம்புகிறார்.!
மரத்தடியில் இருந்தவனை!
மகானென்று நம்பி!
மனத்தினையும் தொலைத்துவிட்டு!
பணத்தினையும் பறிகொடுத்து!
பரிதவித்துப் போகின்றார்!
இன்றிருந்த நிலையினையும் இழந்துவிட்டு !
இல்லாத ஒன்றுக்காய்!
இப்படியேன் பரிதவிப்பு!
கண்டதையும் கேட்டதையும்!
கட்டாயம் நடக்குமென்று நம்பி!
கடன்பட்டு வாழுகிறார் !
காலமெல்லாம் கற்பனையில் !
நிசத்தினை நினைத்திடா!
நிழல்களின் வாழ்வது!
நிச்சயம் மாறணும்!
அறிவினில் ஆசை அமிழ்ந்திடின்!
அஃது சாத்தியமாயினும்!
சாத்திரி சொன்னது சத்தியம் என்றுதான்!
‘சா’ வரை நம்புவாராதலால்!
சாத்தியமாகுமோ?!
02.!
உறவு!
--------!
ஆயிரம் ஆயிரமாய்!
அள்ளிக் கொடுத்தேன்!
வெள்ளிப் பணத்தை!
அங்கிங்கெனாதபடி!
எங்கும் நிறைந்தது!
உறவு.!
காலம் கரைந்தது!
காசும் கரைந்தது!
காற்றெனப் பறந்தன!
கரையெலாம் இருந்த உறவுகள்!
தேற்றி எனை நான்!
திரும்பு முன்னே!
காலம் காட்டி நின்றது!
காயத்தின் சுவடுகளை.!
!
-கலாநிதி தனபாலன்
கலாநிதி தனபாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.