ஒற்றை பூமாலை.. லஞ்சம் - கி.அற்புதராஜு

Photo by Patrick Perkins on Unsplash

01.!
ஒற்றை பூமாலை !
---------------------!
மனைவியின் !
வேண்டுதலை !
நிறைவேற்ற !
ஞாயிறு மாலை !
கோவிலுக்கு !
பேருந்தில் செல்லும் முன் !
கோவில் அருகில் !
பூமாலை கிடைக்குமோ, !
கிடைக்காதோ என எண்ணி !
ஏறுகின்ற பேருந்து நிலையம் !
அருகிலிருந்த பூக்கடையில் !
ஒற்றை பூமாலையை !
விலைப் பேசி வாங்கி !
பேருந்தில் ஏறினோம். !
!
ஒற்றை பூமாலையைப் !
பார்த்த சகப் பிரயாணி !
சற்றே தள்ளி உட்கார்ந்தார். !
!
இறங்கும் பேருந்து நிலையம் !
அருகிலேயே கோவில் !
இருந்ததால், நாங்கள் !
கோவிலுக்குள் நுழைவதை !
அவர் பார்த்திருந்தால் !
திருப்தி அடைந்திருப்பாரோ !
என்னவோ..! !
!
02. !
லஞ்சம் !
-------------!
அரசாங்கம் தினந்தோறும் !
500 ரூபாய் கொடுத்தும் !
வேலை செய்யாத !
அரசு அதிகாரி, !
நான் 50 ரூபாய் கொடுத்ததும் !
செய்து முடித்தார் !
அந்த வேலையை
கி.அற்புதராஜு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.