மழை வேண்டல் - முத்துசாமி பழனியப்பன்

Photo by FLY:D on Unsplash

அணை கட்டி நீர் தடுக்கும்!
அண்டை மாநிலங்கள்!!
அகன்றோடிய காவிரியாய்!
இனி வாய் பிளந்து கிடக்குமோ!
எம் நிலங்கள்?!
எத்தீங்கு யாம் செய்தோம்?!
இப்பெருஞ் சாபங் கொடுத்தார் யார்?!
விழி திறந்து பாராயோ!
வருண பகவானே!
எங் காடுகள் கொடுக்கும்!
கருணை மனுவை!
உஞ் செவியில் செலுத்தாயோ?!
கள்ளிச் செடிகள் முளைத் தெழுமுன்!
காட்டாறு மழை பல அனுப்பி!
அணைகள் தரை மட்டஞ்செய் தெங்கள்!
அடுப்பெரிய ஆணை நீ செய்வாயோ?
முத்துசாமி பழனியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.