சிவப்பு கம்பளம் - இரா . அரி

Photo by Jr Korpa on Unsplash

உன் பாதையில்
நீ செல் ....

உன்னை தேடிவரும்
மானிடருக்கு
ஆலோசனை சொல் ...

உன்னை மதிக்கும்
சிலருக்கு சிவப்பு
கம்பளம் விரி....

ஆனால்

உன்னைப் போலவே
மாறவேண்டும் என்று
ஒருநாளும் நினைத்திடாதே ......

நீ- நீயாக இருக்க
நினைக்கும்போது
அடுத்தவர் ஏன் ?
உன்னைப்போல மாறவேண்டும்
என்று நினைக்கிறாய் ....

உன்னை மாற்றிகொள்
நீ நிலவாய்
காட்சி தருவாய்
பிறரை மாற்ற நினைத்தால்
உன் மார்பிலே
நீயே குத்திக்கொள்ளும்
கத்தியாகிறாய் .
இரா . அரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.