பெண்ணே - எதிக்கா

Photo by Tengyart on Unsplash

தயவுசெய்து என்னை துளியும் வதைக்காதே !
உன் கோபதாபங்களை எல்லாம் !
என் மீது கொட்டித்தீர்க்காதே !
என்னால் எதையுமே தாங்கமுடியாது !
தாங்கும் வலிமையும் இல்லை !
ஆணுக்குரிய குணங்கள் யாவும் !
என்னிடம் நிறையவே இருக்கின்றன - ஆனாலும் !
ஏனோ உனைக் கண்டதும் !
இவை யாவும் செத்துப்போய் விடுகின்றன !
உன் முன்னால்... மௌனம் !
அது மட்டுந்தான் என்னுடன் துணையாக !
மரத்துப்போன உணர்வுகள் எல்லாம் !
மீட்கப்படுவதுபோல் ஒரு உணர்ச்சி - இருந்தும் !
நான் ஒரு காட்டாற் றுக்கு நிகரடி... ஆனால் !
நீ யார்? !
அந்த நிலவுக்குப் பிறந்தவளா ? இல்லையேல் !
ஏன் என்னை ஒவ்வொரு இரவும் !
உன் கரங்களால் தீண்டித் !
தொந்தரவு செய்கிறாய் ?
எதிக்கா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.