உனை ஈர்க்காவொரு மழையின் பாடல் - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Tengyart on Unsplash

நான் மழை!
ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்!
உன் பழங்கால ஞாபகங்களை!
ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் !
எனை மறந்து!
சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்!
குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென!
தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்!
ஆனாலும்!
உன் முன்னால் உனைச் சூழச்!
சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன் !
உனைக் காண்பவர்க்கெலாம்!
நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்!
கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்!
எனக்குள்ளிருக்கும் உன்!
மழைக்கால நினைவுகளைத்தான்!
நீ மீட்கிறாயென!
எனை உணரவைக்கிறது!
எனது தூய்மை மட்டும் !
இன்னும் சில கணங்களில்!
ஒலிச் சலனங்களை நிறுத்திக்!
குட்டைகளாய்த் தேங்கி நிற்க!
நான் நகர்வேன் !
சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி!
'அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?'!
எனக் கோபத்தில் நீ அதிர்வாய் !
எனைத் தனியே ரசிக்கத் தெரியாத!
நீ மட்டும் மனிதனா என்ன?
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.