தடங்களழியும் பொழுதிலுன் நேசம் - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by laura adai on Unsplash

வெப்பக்கணப்பொழுதின்!
ஆவியேற்றப்பட்ட மேகப்பொதியை!
மண்டைக்குள் பிதுக்கியடைத்ததாய்!
பேய்க்கனம் கனக்கும் !
இருவிழியும் மிகக்கலங்கி!
தலைக்குள் வலியெடுக்கும்!
மரணத்தின் எல்லையில்!
ஆரம்பிக்கும் பாடலெனது !!
!
எந்தப்பொழுதொன்றில்!
என் பெயர் சொல்லியழைக்கின்றாய் ?!
ஒரு கோடிக்கீற்றுக்களும்!
எனக்கு மட்டுமேயான!
அந்தகாரத்திலொரு பகுதிக்கேனும்!
ஒளியினை வழங்கமுடியாப்பட்சத்தில்!
எந்த நம்பிக்கையிலெனை!
வழி தொடருகிறாய்...?!
!
ஒப்பாரிக்கவி மட்டுமே பாடும்!
ஒரு குயிலின் ராகத்தை!
எந்தக்காற்றின் தேசத்திற்குள்!
சிறையடைக்கப் பார்க்கின்றாய்?!
அல்லது!
எந்தக்காலத்தினறைகளுக்குள்!
ஒளித்து வைக்கப்போகின்றாய்...?!
!
உலகத்திலெனதிருப்பு!
இந்நாள் வரை மட்டும்தானென!
முடிவானதன் பிற்பாடுமதனை!
மாற்றமுடியுமெனில் மட்டுமிங்குனக்கு!
இருதுளிக் கண்ணீர் விடலாம் !!
!
எனினும்,!
கரையானாய்க் குடிபுகுந்து!
மூளைக்குள் அரித்தெடுக்கும்!
வலியுணர்ந்தவன்(ள்) நீயல்ல !!
!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.