சுனாமியழித்த சினேகிதனுக்கு - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Jan Huber on Unsplash

எங்கிருக்கிறாய் !
எனதினிய நண்பனே?!
!
கறுப்பு,வெள்ளை ஓவியங்களாய்க்!
காட்சிகள் மறைய!
நிலவின் சாட்சியாக!
நீ வாழ்ந்த ஊருக்கு!
நிவாரணப் பொருட்களோடு!
நாமனைவரும்!
நள்ளிரவில் வந்தடைந்தோம் !!
!
உனது சுவடு பதித்த!
கடற்கரை,!
உனது சுவடு அழித்த!
கடல்!
அனைத்தையும் பார்த்து!
விக்கித்து நின்றோம் ! !
!
என்றாவதொருநாளில்!
என்னையும் - உனதூருக்கு!
அழைத்துச் சென்று,!
கடல் அழகு காட்டி,!
நடுநிசியில் - சுடச்சுட!
மீன் வறுத்த!
நிலாச்சோறுண்ணும் ஆசையை!
இறுதியாக என்னிடம்!
சொல்லிச் சென்றிருந்தாய் !!
!
புன்னகை தவறிய முகங்களையும்,!
விரக்தி தேங்கிய கண்களையும்!
பார்க்க நேரிட்டபோதெல்லாம்!
உன்னையும் உயிருடன்!
சந்திக்க வேண்டுமென!
இதயம் - ஏங்கித் தவித்திற்று !!
!
உனது இறுதி மூச்சை!
ஏந்திய காற்று,!
உனது சுவாசப்பைகளை!
நிரப்பிய சமுத்திரம்,!
உனது தேகத்தை!
விழுங்கியிருக்கும் பூமி!
அனைத்தும்,!
உனது ஞாபகங்களைத் திரட்டி!
என்னிடம் தந்தன !!
!
கொடிய கனவொன்றினால்!
திடுக்கிட்டெழுதல் போல!
கொடியில் உலரும்!
உனதாடைகளைக் காண!
நேரிடும் கணங்களிலெல்லாம்!
நெஞ்சு நடுங்கி,!
விம்மித் தடுமாறுகின்றேன்!
உனது வெறுமையுணர்ந்து!
திகைத்து நிற்கின்றேன் !!
!
உனது தொழுகைகளும்,!
நோற்ற நோன்புகளும்,!
வாய்மொழிந்த திக்ருகளும்!
ஓதிய ஒவ்வொரு ஆயத்களும்!
நீ பற்றிக்கொள்ள!
பெரும் தூணாக அமைந்திருக்குமென!
உறுதியாக நம்புகிறேன் !!
!
எனது அறையில்!
என்னுடன் வசித்த!
என்னினிய நண்பனே;!
மஹ்ஷரில்!
மறுபடியும் கரம் கோர்ப்போம்,!
நீண்ட நடை பயில்வோம் - அங்கே!
சுனாமி வராது !!
- எம். ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை ,!
இலங்கை
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.