ஊருக்குப் போகிறேன்.. வெற்றிஉண்டு - சு.திரிவேணி, கொடுமுடி

Photo by FLY:D on Unsplash

01.!
ஊருக்குப் போகிறேன் !
--------------------------------!
ஊருக்குப் போகிறேன் நான். !
அழகான பெயர்ப் பலகை தாங்கிய !
காப்பி ஷாப்புகள் அங்கில்லை. !
விருப்பத்தாலோ கட்டாயத்தாலோ !
விட்டுப் போன உறவுகளைக் !
கட்டிஇழுக்கும் இமெயில் !
வசதியும் அங்கில்லை. !
ஆனாலும் எங்கள் ஊர் அழகானது. !
சலிக்க வைக்கும் சில்லறைச் சண்டைகள் !
இருந்தாலும் சீரியல் பார்த்தபடி !
வரவேற்கும் கொடுமை அங்கில்லை. !
காப்பிக்கும் சக்கரைக்கும் வந்து விடுவார்களோ !
என்ற பயத்தில் கதவடைத்துக் !
கிடக்கும் தனிமை இல்லை. !
எந்த வீட்டு உறவென இனம் பிரிக்காத !
பொதுவுடைமைச் சமூகம் அது. !
நீண்ட நாட்களுக்குப் பிறகு !
ஊருக்குப் போகிறேன். !
அடையாளம் கண்டு ஊரே !
நலம் விசாரிக்கக் கூடும்! !
வீட்டைக் கை விட்டாயே !
எனக் குற்றம் சாட்டக் கூடும்! !
இந்தக் கேள்விக்கு மட்டுமல்லாது !
பெரும்பாலான ஊர்க் கேள்விகளுக்கு !
சிரிப்பே பதிலாய் அமையக் கூடும்! !
பேருந்து நிறுத்தத்தில் !
இறங்கினேன் நான்.!
யாருமில்லை அங்கே. !
ஏமாற்றமாக இருந்தது !
ஏக்கமாகக் கூட!!
காளான் போலக் கடைகள் !
நிறைய முளைத்திருந்தன. !
காசை வாங்கிப் பொருளைத் !
தரும் கைகள். !
எப்போதும் மும்முரமாய்!
மனிதர்கள். !
முகம் பாராமல் வாய்கள் !
மட்டுமே பரிமாறும் வார்த்தைகள். !
அடைத்தே கிடக்கும் வீடுகள். !
என் ஊரில்லை இது! !
இடம் மாறி இறங்கியிருக்கிறேன்!! !
இல்லாவிட்டால்... !
பூக்களுக்குள் வீடு கட்டிப் !
பட்டாம் பூச்சியால் எப்படிச் !
சிறையிருக்க முடியும்? !
!
02.!
வெற்றிஉண்டு!!!
--------------------!
மெல்ல உயர்கிறது தீ!
ஆகுதியாய்த் தன்னைக்!
கொடுத்து வளர்த்தும்!
எண்ணயைத் தின்றே!
கொழுக்கிறது சுடர்.!
மையம் உயர்தலும்!
பக்கம் தாழ்தலும் என்று!
நெருப்பிலும் உண்டு ஏற்றத்தாழ்வு!!
உள்ளே ஒன்றுமாய்!
வெளியில் வேறுமாய்!
மாறுபட்ட முகம் காட்டும்!
மனிதன் போலத்தான் தணலும்.!
உருமாற்றம் உண்டோ இல்லையோ!
நிறமாற்றம் காட்டுவதுண்டு!!
எதைக் கொண்டு உயர்ந்ததோ!
அதை ஏறி மிதித்து!
அழிக்கவும் தயங்குவதில்லை.!
இந்த உலகில் -!
வல்லவர்களுக்குண்டு வெற்றி!
வாழ்விக்கும் நல்லவர்களுக்கல்ல
சு.திரிவேணி, கொடுமுடி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.