நாளின் மறைவு... பாடலின் பிறப்பு - சத்தி சக்திதாசன்

Photo by FLY:D on Unsplash

மாலைதான் இது !
மயக்கும் வேளைதான் !
மனதில் ஒரு ராகம் !
பறவை மீண்டும் !
பறக்குது தன் !
கூட்டுக்கு !
நிலவு மீண்டும் !
நீந்துது அந்த !
வானில் !
பகலை அணைக்க !
இரவு அசைந்து !
வருகுது. !
ஆண்டவன் தூங்க !
அணைக்கின்றானோ !
விளக்கை .... !
ஆந்தைக்கு ஏனோ !
கொண்டாட்டம் !
ஆரம்பம் அதன் உலகம் !
காரில் ஏறி !
விரைகின்றேன் !
அது கூட என் கூடோ ? !
உழைப்பதும் பின் நம் !
பிழைப்பதும் உலகில் !
இயந்திரச் சுழற்சி .. !
எங்கே தொடங்குகிறோம் !
அங்கேயா முடிக்கின்றோம் ? !
அதுவும் தெரியவில்லை !
சிரிப்பதும் செயற்கை !
அழுவதும் செயற்கை !
இதுகூட இயற்கையோ .... !
என் நாளின் முடிவு !
ஏக்கத்திற்கு எங்கே முடிவு !
தேவைகளுக்கு எங்கே .... !
தூக்கத்தைத் தொலைத்தது !
தொலைத்ததை மறந்தது !
துன்பத்தில் விளைந்ததா அன்றி .... !
காலையில் தொடங்கி !
மாலையில் முடிவது , நாள்தான் !
மனதின் எண்ணங்களல்ல !
காரும் பறக்குது என் !
மனமும் பறக்குது !
நான் செல்வதும் ஒரு கூடுதான்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.