புதிதாய்ப் பிறப்போம் - சித. அருணாசலம்

Photo by Tengyart on Unsplash

வாழ்க்கையின் அடுத்த படியில்!
வழுக்காமல் செல்வதற்கு,!
செறிவாய் நம்மை!
செதுக்கிக் கொள்வதற்கு!
எண்ணங்களை உளியாக்கி !
உள்ளங்களைக் கையாளும் நேரமிது.!
பிறர் காணமுடியாமல்!
மூடி வைத்திருக்கும் முகத்திற்குள் !
வேறுபாட்டைக் களைவோம்.!
முகத்திற்குப் போடுகின்ற ஒப்பனையை!
முக்காடிட்ட உள்ளத்திற்கு!
முழுவதுமாய்ப் போடுவோம்.!
நாக்கைத் திருப்திப்படுத்த!
உயிர்களை வதைக்கின்ற!
போக்கை மாற்றிக் கொள்வோம்.!
வழக்கத்தில் அரிதாகிப் போன!
வாக்குச் சுத்தத்திற்க்கு!
வழி வகுத்துக் கொடுப்போம்.!
வேறுபாடு தழைத்தோங்க!
வேரூன்றிய வேண்டாதவற்றை!
மாறுபாடு காணாதொழிப்போம் - இங்கே!
கூறுபோட்டு மனிதர்களைக்!
சோறுதேடும் கூட்டமாக்கியோரைச்!
சொல்லால் சுட்டொழிப்போம்.!
சமுதாயச் அவலங்களைச்!
சந்தி சிரிக்க வைப்பதற்கு!
பாரதியார், பாவேந்தர், !
பண்பாளர் பட்டுக்கோட்டை போல்!
புத்தியில் ஏற்றி வைப்போம் - இதற்காய்!
புதிதாய்ப் பிறந்து பார்ப்போம்.!
!
-சித. அருணாசலம்
சித. அருணாசலம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.