அக்சய திருதியை - சித. அருணாசலம்

Photo by Gary Yost on Unsplash

நாளெல்லாம் நிகழ்வுகளில் !
நல்லதே வேண்டுமென!
எல்லோரிடமும் எதிர்பார்ப்பது!
புல்லைத் தின்ன சொல்லிப்!
புலியை மல்லுக்கட்டுவது போலாகும்.!
நல்ல நாட்களில் அதைச்!
சொல்ல வரும் போது!
நினைவினில் அகலாது !
நீங்காமல் நிறைந்திருக்கும்.!
தங்க வியாபாரத்திற்காக!
தந்திரமாய் அதை மாற்றி!
வாங்குங்கள் தங்கத்தை!
பெருக்குங்கள் செல்வத்தை - என!
உணர்வுகளைச் சாதகமாக்கி!
உல்லாசமாய் வியாபாரம் பெருக்கி!
மனிதனைச் சிந்திப்பதிலிருந்து!
மழுங்கடிக்கச் செய்வதையும்,!
கூட்டத்தை வரவழைத்துக் !
கொள்ளை லாபம் ஈட்டுவதையும்,!
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!
உள்ளத்தில் தூய்மை ஒன்றே!
உலகத்தில் சிறக்குமென்பதை!
உணர்ந்திட வேண்டும்.!
-சித. அருணாசலம்
சித. அருணாசலம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.