ஏன் எனக்கில்லை?.. தூய்மை.. எங்களுக்கு - சேயோன் யாழ்வேந்தன்

Photo by Jan Huber on Unsplash

01.!
ஏன் எனக்கில்லை?!
-----------------------------------!
என் முன்னோருக்கு இருந்தது!
எனக்கு வால் இல்லை!
என் முன்னோருக்கு இருந்தது!
எனக்கு வாள் இல்லை!
என் முன்னோருக்கு இருந்தது!
எனக்கு வாழ்வில்லை!
02.!
தூய்மைப்படுத்துவதற்கு ஆயத்தமாகுமுன்!
----------------------------------------------!
ஒட்டடைக்குச்சியால்!
உங்கள் தலையில் படிந்துள்ள!
பூச்சிக்கூடுகளைத் துடைத்தெறியுங்கள்!
துடைப்பத்தால் பெருக்கி!
மனசின் குப்பைகளை!
வெளியே தள்ளுங்கள்!
ரத்த வாடை போகும்வரை!
கைகளை நன்றாகக்!
கழுவிக்கொள்ளுங்கள்!
ரத்தக்கறை படிந்த ஆடைகளை!
சவக்காரத்தில் ஊறவைத்துவிட்டு!
ஒருபொழுதாவது அம்மணமாய் நில்லுங்கள்!
03.!
எங்களுக்கு விடை தெரிந்த கேள்விகள்!
------------------------------------------------!
சரக்கு ரயில் என்பது!
மதுபானங்கள் ஏற்றி வரும்!
ரயிலல்ல!
ஆண்டிமனி என்றோர்!
உலோகம் இருந்தாலும்!
கோயில் மணி பித்தளையால்தான்!
செய்யப்படுகிறது!
!
மோடி மஸ்தானின் மாந்தரீகம் என்பதும்!
மோடி மேஜிக் என்பதும்!
வேறு வேறு!
இந்தியாவின் ‘கேபிட்டல்’!
வெளிநாடுகளில் இருந்தாலும்!
‘புதுடெல்லி’ என்பதுதான்!
சரியான விடை!
நாட்டைத் தூய்மையாக்க!
நாம் யாரும்!
சுத்தமானவர்களாக இருக்கவேண்டியதில்லை!
எங்களுக்கு விடை தெரிந்த!
இது போன்ற!
பொது அறிவுக் கேள்விகள்!
எந்தப் போட்டித் தேர்விலும் கேட்கப்படுவதில்லை
சேயோன் யாழ்வேந்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.