தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என் பசி

கவிதா மகாஜன்
என் பசி!
-> மராத்திய மொழிக்கவிதை> தமிழாக்கம் : புதியமாதவி!
ஒத்துக்கொள்கிறேன்!
நான் உன் அடிமை என்பதை.!
உணர்ந்து கொண்டேன்!
இழந்துப்போன!
என் உரிமைகளை.!
நானே வலிய வந்து!
ஏற்றுக்கொண்டு விட்டேன்!
-என் சுதந்திரம்!
பறிக்கப்பட்டதை-!
என்னைக் கட்டிப்போட்டிருக்கும்!
சங்கிலியின் மறுமுனை!
உன் வசம்.!
நீ ஆட்டுகிறாய்!
என்னை ஆட்டுவிக்கிறாய்!
காட்சிப்படுத்துகிறாய்.!
என்னைக் !
காட்சிப்பொருளாக்கும்!
கண்காட்சிகளை!
என் சம்மதத்துடனேயே!
அரங்கேற்றுகிறாய்.!
என்னை விடுவிக்க!
என் மீது கொண்ட!
அபரிதமான உன் காதலால்கூட !
என் கட்டுகளை அவிழ்க்கும்!
நாட்களைப் பற்றி!
பேசாதே.!
உன் வாசலுக்கு வெளியே!
என்னைக் கட்டிப்போடும்!
காலச்சங்கிலிகள்!
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்!
காத்திருக்கும்!
சிவந்த சவுக்கள்!
!
கெட்டுப்போன!
எச்சில் பருக்கையை!
என் தட்டில் பரிமாற!
காத்திருக்கும்!
ராட்சதக்கைகள்!
என்ன செய்யட்டும்!
இருந்துவிட்டுப் போகிறேன்!
உனக்கு!
உனக்கு மட்டுமேயான !
அடிமையாக.!
களைத்துப் போய்விட்டேன்.!
கண்டவர்கள்!
கால்களை எல்லாம்!
நக்கி நக்கி!
வறண்டு போய்விட்டது!
என் நாக்குகள்.!
அதில் பிறக்கும்!
என் வார்த்தைகள்!
வலிமை குன்றிவிட்டன!
எழுந்து நிற்க முடியாமல்!
சரிந்து விழுகின்றன.!
பற்களுடன் உரசியப்பின்னும்!
என் நாக்குகளுக்கு!
கிடைக்கவில்லை!
வார்த்தைகளின்!
ஒலிச்சுவடு.!
என் உதடுகளைப் !
பற்றிக்கொள்ள துடிக்கும்!
வார்த்தைகள்!
எல்லா இடங்களிலும்!
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.!
எதுவும் மிச்சமில்லை!
என்வசம் இப்போது.!
கண்களில் !
தென்படும் கடைசி !
எதிர்பார்ப்பைத்தவிர:!
உன் தட்டில்!
எஞ்சி இருக்கும்!
கடைசிப் பருக்கையை!
தருவாயா!
என் பசித்தீர்க்க?!
-- (மராத்திய பெண்கவிஞர் கவிதா மகாஜன் (Kavita Mahajan) கவிதை நூல் தத்புருஷ் ல் எழுதியிருக்கும் பசி என்ற கவிதையின் தமிழாக்கம்.)

மானுடச் சுடர்!

வல்வை சுஜேன்
பொன்னும் மணியும் கொட்டிக் கிடக்கும் உலகில்!
பொய்யுக்கும் மெய்யுக்கும் ஜீவனாம்சம் !
வழக்காடு மன்றில் நிலுவையில் கிடக்கிறது!
உண்மை ஜீவனை ஊனம் வெல்வதில்லை!
மானுடச் சுடருக்கு மரணம் எல்லையும் இல்லை!
இடி மின்னல் கீற்றும் இவனடி கிடக்க!
தமிழ் வானை கிளித்தான், மில்லர்!
அகிம்சை கீற்றொடு !
ஆழி அலையாய் எழுந்தே!
ஆன்மாவை வென்றான், திலீபன்!
மண்மீட்ப்பு போரிலே மரபுக் கனல் மூட்டி!
தந்தை சொல் காத்த தணையனாய் !
உயிரை முந்தி விரித்தான்!
சாழ்ஸ் அன்டனி!
ஒடிபட ஒடிபடத் தானே !
சாரல் அடிக்கிறது இங்கே!
இந்தச் சாரலுக்குள் தானே!
தமிழீழ வானமும் !
தாய் மண்ணை தொடுகிறது !
தோழா நீதிக்கோர் நித்தியச்சுடர்!
மனு நீதி கண்ட சோழனே!
கொன்றவனை நீயும் கொல்!
சம தர்ம தராசு இன்று உன் கையில்!
விடுதலைச் சுடரின் கீற்றுனை!
மாற்று நிறங்கள் !
ஊற்றுக் கொள்வதில்லை!
மானுடச் சுடர்!
மாவீரனின் மகுடமே !
பொறுத்தார் பூமி ஆழ்வார் என்றுருந்தால்!
இலவம் கிளியும் உன்னை பார்த்து சிரிக்கும்.!

ஒப்பம்

வேல் கண்ணன்
கையெப்பம் கேட்டார்கள்!
அவரவருக்கான காற்றில்!
அவரவருக்கான வானத்தில்!
பறப்பதற்கு!
நிரப்பபடாத ஒப்பந்த படிமத்தில்!
கிழிந்து தொங்கியது வானம்!
சுவாசிக்கவும் மிச்சமில்லாத!
காற்று!
மறுக்கையில்!
நிர்முலமாக்கபட்ட பிடரியில்!
வெடித்தது துவக்கு.!
ஒன்றன் பின் ஒன்றாக!
கையெப்பம் இட்டு நிமிர்கையில்!
உடைந்தது சூரியன்

விவரம் அறியா விஞ்ஞானிகள்

ரா. சொர்ண குமார்
உன்னை தொடும் சையிலே!
வெளியில் பெய்கிறது மழை!!
மழையின் சைக்கு மனமிறங்காமல்!
வீட்டுக்குள்ளே நீ!!
தொட்டே தீருவேன் என்று!
விடாமல் பெய்கிறது மழை!!
தொடவிட மாட்டேன் என்று!
வீம்பில் இருக்கிறாய் நீ!!
உனக்கும் மழைக்குமான போட்டியில்!
நஷ்டம் என்னவோ நாட்டுக்குதான்!!
போனால் போகட்டும் !
கொஞ்சம் நனையேன்!!
பாவம் மழைக்கு!
பைத்தியம் பிடிக்கப் போகிறது!!
கடலில் உள்ள புயலால்!
மழை என்கிறார்கள்!
விவரம் அறியா விஞ்ஞானிகள்!!
எனக்குத் தானே தெறியும்!
மழை.!
கடல் புயலால் அல்ல!!
இந்த அழகு!
கன்னிப் புயலால் என்று!!
-ரா.சொர்ண குமார்,!
சென்னை

ஈழத் தமிழனின் நிலை

சித. அருணாசலம்
உயிர் ஒன்று மட்டுமே!
ஊசலாடும் நிலையில்!
ஒட்டிக் கொண்டிருக்க,!
கால்களுக்குக் கூட!
போக்கிடம் இல்லாமல்!
கவலைகள் மலையாய்க்!
கனத்துக் கிடக்கும் மனது.!
முட்களே இங்கு!
ரோஜாவைக் குத்திக்!
காயப் படுத்திக் !
கசக்கிப் பிழியும் நிலையில்,!
இடுப்புக்கு மேல் துணியின்றி!
எல்லோரும் காந்திகளாய்...!
சுற்றம் என்பதே புதிராகி!
முற்றும் துறந்த கீழ்நிலையில்!
ஒட்டுமொத்த இனமே!
ஒடுங்கிப் போனது.!
உலகத்தில் தமிழுக்கு!
உயிர் கொடுத்த கூட்டம்,!
இனபேதத்தைப் பயிராக்கி!
ஈனத்தை வளர்க்கும்!
சர்வாதிகாரச் சாக்காட்டில்!
சதிராடித் திணறுகிறது.!
புத்தனைக் கூடத் தனது!
போதனைகளில்!
பொல்லாங்கு தெரிகிறதா என்று!
திருப்பிப் பார்க்கவைக்கும்!
வெறுப்புகளைச் சுமந்தவர்கள்!
விதைத்த வினை இன்று!
வேதனைகளை விளைச்சலாக்கி!
வேரூன்றி நிற்கிறது

மூலைகள்

கவிதா. நோர்வே
இது எனது வீடு.!
இந்த வீட்டின்!
ஓவ்வொரு மூலையும் என்னுடையவை.!
ஓவ்வொரு மூலையும் தனித்துவமானவை!!
இதோ!
இந்த மூலையில்!
இரண்டு பாத்திரம், நாலு கரண்டி!
ஒரு அடுப்பு…!
எல்லாம் எனது!
எதிர் மூலையில்!
எனக்கென்று வாங்கித்தந்த!
பெரும் இயந்திரங்கள்!
துணிகள் துவைக்கவும்..!
காயப்போடவும்..!
ஒவ்வொரு அறையிலும்!
பெரிய அலமாரிகள்!
காய்ந்ததை அடுக்கவென்று!
வலப்பக்கம் !
இருக்கும் மூலையில்தான்!
படுக்கையறை.!
படுக்கவும்…!
கலைக்கவும்…!
பின் விரிக்கவும்!!
அதன் இடப்புறமும்!
எனது மூலைதான்!
ஒரு தொட்டில்!
பால் போத்தல்கள்!
பொம்மைகள்!
அழுக்குத் துணிகள்...!
டீவி,!
மேசை, !
இருக்கைகள்.!
ஆதன் மேல் எறியப்பட்ட!
பொருட்கள்.!
அடுக்கவும் துடைக்கவும்!
சாப்பாட்டு மேசை,!
தூசி தட்ட பலவித பொருட்கள்.!
எல்லாம் என்னுடையவைதாம்!
வீட்டின் பொறுப்பானவர் என்ற!
பெயரில்!
வீட்டுப்பத்திரம்!
மட்டும் !
என்னை மொத்தமாய் ஆட்கொண்டான்!
பெயரில்!
-கவிதா. நோர்வே

மேகமாய்

பாண்டித்துரை
நர்மதை நதி.!
சரோபவர் அணைக்கட்டு.!
23 ஆண்டு தவம்!!
ஆர்பாட்டமே இவளின் வாழ்க்கை,!
ஆர்பணிப்பே இவளின் வேட்கை.!
நர்மதை நதி கூட!
இவள் நாடியின் துடிப்பறியும்,!
மேகத்தின் துளி கூட!
மேதாவின் சொல் கேட்கும்,!
மேதா பட்கர்.!
அரசியலுக்கு அப்பாற்பட்டு!
அகிம்சா வழியிலே,!
தொலைநோக்கு பார்வைகொண்டு!
தொடர் உண்ணாவிரதம்,!
உயிரையும் விடத்தயார்!
அணை உயர்வதை தடுத்திடவே,!
மக்கள் செத்து வீழ்ந்தாலும்!
செவிசாய்க்க மறுக்கும் அரசின்!
செவியில் அறைந்து கேட்கும் தைரியம்,!
இவள் நலத்தில் இன்னல்கள் விரும்பும்,!
பொது நலத்தில் தன் நலன் மறந்தும்.!
தனியொரு மனிதமாக!
இத்தரணி முழுவதும் சிறந்தும்,!
மக்கள் நலன் காக்கும்!
இவள் ஆத்மா!
மனித நேயத்தில்!
மகாத்மா!
இவளின் அரவணைப்பு இருக்கும்வரை!
அணைஉயரா!!
இவள் அயர்ந்த பின்னே?!
!
எழுத்து: பாண்டித்துரை

எங்கள் பூமிக்கு வா

நவஜோதி ஜோகரட்னம்
அகலத்துக்கும்!
அன்பைப் போதித்த அன்னையே!!
மனிதக் குவியல்கள்!
மடிந்த!
எங்கள் பூமிக்கு வா… !
அல்லலுற்று !
அளவு கணக்கின்றி!
அழிவுக்கு ஆட்பட்டு!
அகதிகளாய் அலைந்து!
அவதிப்படும் ஆத்மாக்களை !
சேர்த்தணைக்க!
எங்கள் பூமிக்கு வா…!
அப்பாவிகளை !
புல்டோசர் கொண்டு !
அரைத்துப் பார்த்தது!
எங்கள் பூமிதான்!
உடைப்பதற்கென்றே !
உருவெடுத்த!
உருவங்களைப் பார்க்க!
எங்கள் பூமிக்கு வா… !
புதைக்க நேரமில்லாத!
புழுத்துப்போனது தேசம்!
பூவாடை இன்றி!
பூக்கள் கருகி !
இன்றும்!
ரத்த வாடை வீசும் !
பாலைவனத்தை பார்ப்பதற்கு!
எங்கள் பூமிக்கு வா… !
திரைமறை நாடகங்கள் !
திசை யாவும் சூழ்ந்துவர!
நச்சுப் புகை வந்து!
நசுக்கியதை அறியாயோ!!
பீரங்கி வேட்டுக்கு இனி ஒரு!
பிஞ்சுடம்பும் வேண்டாம்!
ராட்சத சூரியன்போல்!
எங்கள் பூமிக்கு வா…

சிந்தனையில் தீ.. தீயினை கண்களில்

தமிழ்ப்பொடியன்
சிந்தனையில் தீ வை...!!!.. தீயினை கண்களில் கொழுத்து!
உன் மேனியில் அல்ல...!!! !
01.!
சிந்தனையில் தீ வை...!!!!
---------------------------------------!
தமிழகம் என் தாய் வழி உறவடா...!!!!
தம்பிகளா நீங்களெல்லாம் எங்களின் தொப்புள்கொடி உறவடா...!!!
வேண்டாம் இந்த தீக்குளிப்பு!
போதும் இதுவரை கண்ட இழப்பு!
இனியும் தாங்கமுடியாது இனியொரு உரியிழப்பு..!!!
முத்துக்குமார் இட்ட தீயை - உன்!
நெஞ்சினில் ஏந்து!
உன் மேனியில் அல்ல..!!!!
உன் மேனியில் இட்ட தீ !
ஒரு வீரத்தமிழனை அழிக்கும்...!
உன் கண்களில் தீயை வை!
உன் நெஞ்சினில் விடுதலை தீயை பற்ற வை -அது!
ஆயிரம் தமிழனை வாழவைக்கும்.!
உயிரை விடாதே உன் உணர்வை தா...!!!!
என் சகோதரா!
தீக்குளிக்க வேண்டியவன் நீயல்ல...!!!!
நில்!
சிந்தனையில் தீ வை...!!!!
உனக்கே புரியும் எரிக்க வேண்டியது உன்னையல்ல...!!!!
02.!
தீயினை கண்களில் கொழுத்து!
உன் மேனியில் அல்ல...!!! !
---------------------------------------!
”மக்கள் புரட்சி வெடிக்கும்!
சுதந்திர தமிழீழம் மலரும்”!
அண்ணன் திலீபன் உயிர் கருகும் போது!
சொன்ன வார்த்தை...!
இன்று தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் நேரம்!
மாணவர் புரட்சி வெடிக்கும் தருணம்...!
தொப்புள்கொடி உறவுகள் தோள் கொடுக்கும்.!
எப்போதும் உங்களை எங்களின் இரத்த உறவுகளாய்த்தான் பார்க்கிறோம்!
எப்போதும் உங்களின் மேல் வைத்த நம்பிக்கையையும் விட்டதில்லை.!
தம்பிகளா உங்களின் எழுச்சி ...!!!
தங்கைகளே உங்களின் கோபங்களின் வீரியம்..!!!
தம்பிகளா உங்களின் ஒற்றுமை..!!!
தங்கைகளே உங்களின் கொள்கையின் நம்பிக்கை..!!!
இதில் எதுவுமே சோரம் போகாத !
யாருக்கும் அடிபணியாத!
எவனுக்கும் விலைபோகாத உறுதியோடு!
பார்த்துக்கொள்ளுங்கள்.!
நம்புகிறோம் இப்போதும் உங்களைத்தான்.!
நமக்கென்று யார் இருக்கிறார் உங்களை விட்டால்...!!!!
நம்புகிறோம் உங்களின் கண்களில் தெரியும் கோபத்தை...!
நம்புகிறோம் உங்களின் வார்த்தைகளின் ஆழங்களை...!
நம்புகிறோம் உங்களின் உணர்வுகளின் உண்மைகளை...!
நாங்கள் நம்பிக்கையை எப்போதும் கைவிட்டதில்லை..!
அதனால்த்தான் ஈழத்தமிழன் இன்னும் உயிர் வாழ்கிறான்.!
தொப்புள் கொடி உறவுகளே...!
கண்ணகி இட்ட தீ மதுரையை எரித்ததோ இல்லையோ..!
முத்துக்குமார் இட்ட தீ தமிழத்தில் எரிகிறது....!!!!
தியாகி திலீபனும் முத்துக்குமாரும் ஏற்றிய தீபம்!
எண்ணையை ஊற்றி ஏற்றவில்லை!
அவர்கள் தங்களையே ஊற்றி ஏற்றிய தீபம்...!!!
அணையாத தியாக தீபங்கள்!
யாரும் அணைக்க முடியாத அமர தீபங்கள்...!!!
முத்துக்குமார் கண்ட கனவு பலிக்கும் !
அவன் கண்முன்னே மாணவர் புரட்சி வெடிக்கும்.!
தமிழீழம் எங்களுக்கு தாய்!
தமிழகம் எங்களுக்கு பெரிய தாய் உறவு!
தம்பிகளா நீங்களெல்லாம் எங்களின் தொப்புள் கொடி உறவு!
எங்களின் வலிகளிலும் சோகங்களிலும் உங்களுக்கும் பங்கு!
அடக்குமுறைகளும் அதிகார வெறியாட்டங்களும்!
உங்களுக்கு புதிதல்லவே...!
அட எதற்கு நீ அஞ்சவேண்டும் -கொஞ்சம்!
உரத்தே கேள்...!
அரசியல் பேசும் அசிங்கங்கள் சிலரை!
அருகிலும் அண்டாதீர்கள்!
அவர்களின் அழுக்கு ஒட்டாமல் பழகு.!
துரோகிகளை கண்டால் தூர விலகு.!
மாணவன் என்றால் வெள்ளை அழகு.!
நிமிர்ந்து நில் உன் கொள்கையும் அழகு.!
விடுதலை தீயினை கண்களில் கொழுத்து!
உன் மேனியில் அல்ல...!!!!
மாணவன் என்றால் மாற்றங்கள் என்று...!
மகிந்தனின் ஆயுளை மாற்றி எழுது.!
தமிழீழத்துக்காக உங்கள் உயிர்களை கருக்காதீர்கள்...!
தமிழகமே எங்களுக்காக உணர்வுகளை கொடுங்கள்.!
தம்பிகளா உங்களின் தாகம் அடங்க தண்ணீர் கேட்காதீர்கள்!
தமிழீழம் கேளுங்கள்!
தமிழனுக்காய் நீதி கேளுங்கள்!
உலகத்திடம் எங்களின் உரிமையை கேளுங்கள்...!
உண்மையை உரத்து கேளுங்கள்.!
ஒற்றுமையாய் நின்று கேளுங்கள்.!
ஒயாமல் போராடிக் கேளுங்கள்.!
தமிழகமே...!!!!
தமிழீழம் உங்களின் தாய் வழி உறவு!
எங்களின் வலிகளிலும் உங்களுக்கும் பங்கு

ஆதித்தாய்

ராகவன்
அவள் நடந்தாள்!
எல்லையற்ற பயணமது!
அவள் கண்களிலிருந்து!
கருணையை பருகிக் கொண்டனர்!
அவளது வற்றா முலைகள்!
பலரின் பசியைப் போக்கியது!
அவளது இதயம்!
குழந்தைகளால் பூத்தது!
நம்பிக்கை இழந்தவர்கள்!
அவளின் வார்த்தைகளில்!
உயிர்த்தெழுந்தனர்!
போரும் வாழ்வும்!
இழப்பும் கசப்பும்!
நெஞ்சழுத்த அவள் நடந்தாள்!
அவளின் சோகத்தை!
யாரும் வாசித்ததில்லை!
அவள் அதை விரும்புவதுமில்லை!
மறுபடி மறுபடி!
உயிர்த்தல் அவள்!
வாழ்வாய் இருந்தது!
தன் சின்னக்கால்களால்!
தளரா உறுதியுடன்!
பல்லாயிரம் வருடத்து!
பயணம் அவள் தொடர்ந்தாள்!
அம்மம்மாவின் நினைவாக!
ராகவன்!
30.11.06