தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இயற்கையுடன் கூடி இருப்போம்..!!

எசேக்கியல் காளியப்பன்
{கும்மிடிப்பூண்டியில் ஒரு புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்க ரூ,330 கோடி அனுமதி-செய்தி}!
!
நீர்வருமப் பாதைகளைத் தூர்வாரி,!
நிலம்பிடித்த பேதைகளை உடன்வாரிப்!
பேரளவில் வீணாகும் மழைநீரைப்!
பிடிப்பதற்கு நீர்த்தேக்கம் உருவாக்கி!
ஊர்பிழைக்க வழிசெய்தால் உதவிடுவீர்!!
ஒழுங்காக அதைக்காக்க முன்வருவீர்!!
தேரிழுக்க வருபவர்போல் திட்டமுடன்!
தேர்நிலைக்கு வருவதற்கே உதவிடுவீர்!!
சீருடன்நாம் வாழ்வதற்கு நீர்வேண்டும்;!
சீறிவரும் மழைநீர்க்கும் புகல்வேண்டும்!!
தூரெடுக்கும் பணியினையே இலவசமாய்த்!
தொடங்கிடவா யாருமுமை அழைக்கிறர்கள்!!
ஏரிகளைக் காப்பதற்கே எழுந்திடுவீர்!!
ஏரிகளில் வீடெடுக்க மறுத்திடுவீர்!!
மாறிவருங் காலத்தை உணர்ந்திடுவீர்!!
மக்களது நலமெண்ணி மாறிடுவீர்!!
!
(வேறு)!
சாக்கடைநீர் சுத்தமாக்கப் பட்ட பின்பே!
சார்ந்துள்ள ஏரிகளில் கலக்க வேண்டும்!!
ஊர்க்கடையில் இச்சுத்தம் செய்தல் வேண்டி!
ஒழுங்கான நிலையங்கள் அமைய வேண்டும்!!
போர்க்கொடிகொண் டேரிகளைப் புதுக்க வேண்டும்!!
பொன்னான நீர்தேக்கிப் பொலிய வேண்டும்!!
நீர்க்குறையால் அண்டைமா நிலங்கள் பக்கம்!
நின்றுகை ஏந்தாதே நிமிர வேண்டும்!!
(வேறு)!
குப்பைகொட்டும் இடமல்ல ஏரி!!
குடிவாழும் ஆதாரம் ஏரி!!
‘கப்’படிக்கும் சாக்கடையா ஏரி!!
கழிவுகளின் சேரிடமா ஏரி!!
துப்புரவின் அடையாளம் ஏரி!!
தூரெடுக்க உதவுவதும் நீதி!!
இப்பொழுதே இயற்கையுடன் கூடி!
இருப்பதற்குத் தொடங்கிடுவோம், நாடி

பிறப்பித்தாள் தனையென்றும் மறக்காதே..!

எசேக்கியல் காளியப்பன்
மறக்காதே இமைப்பொழுதும்!
பிறப்பித்தாள் தனை,உன்னுள்;!
இறப்புள்ளும் உனைநினைத்தே!
இருப்பவளைத் தவிப்பவளைச்!
சிறப்புடனே வைப்பதுதான்!
சீருனக்கு மறவாதே!!
வான்தாங்கு மழைபோல!
வயிற்றுக்குள் வளர்த்தவளைத்!
தான் தாங்கி நிற்கையிலே!
தனைஉதைக்கச் சிரித்தவளை!
நீதூங்க விழித்தவளை,!
நீஏங்க அழுதவளை ,!
உன்,உயர்வில் மகிழ்ந்தவளை!
உன்,தாழ்வில் அணைத்தவளை!
உச்சிதனை முகந்தவளை!
உன்,ஊக்கம் வளர்த்தவளை!
எத்தனைதான் துயர்வரினும்!
ஏற்றவளாய், அரசுகளின்!
தொட்டிலிலே உனைக்கொண்டு!
இட்டுவிடாக் கையவளை,!
மறக்காதே இமைப்பொழுதும்!
பிறப்பித்தாள் தனை,உன்னுள்;!
விண்காட்டி மதிகாட்டி!
வெறுஞ்சோறு தந்தவளைக்!
கண்ணீரில் மூழ்கவிட்டுக்!
கையாட்டிச் செல்வாயோ?!
கடல்கடந்து போயுமவள்!
கண்கடந்து போவாயோ?!
காசுபணம் பெரிதாமோ?!
ஆசிரமம் அவளிடமோ?!
இறந்தவளைக் காண்பதற்குப்!
பறந்துவரல் ஆகாதோ?!
மணமென்று பூதனக்குள்!
மறைத்துவைத்துக் காத்தவளைப்!
பிணம்என்றும் ஒதுக்கிடவோ?!
பணமனுப்பி மறந்திடவோ?!
இறப்புள்ளும் உனைநினைத்தே!
இருந்தவளைத் தவித்தவளை!
மறக்காதே இமைப்பொழுதும்!!
சிறப்புனக்கு எதுவென்று!
சிந்திக்க மறவாதே

சரித்திரத்தின் முதலெழுத்து!

எசேக்கியல் காளியப்பன்
ஆதிரையில் வந்தவளே!!
ஆண்டவனின் மறுவுருவே!!
மார்கழியில் பிறந்தவளே!!
மார்கொடுத்து வளர்த்தவளே!!
தேர்ந்தெடுக்கா நற்பேறே!!
தேவனவன் திருக்கொடையே!!
பேர்கொடுத்து மகிழ்ந்தவளே!!
பேறெனவே நெகிழ்ந்தவளே!!
சோர்வுடனே தானிருந்தும்!
சுகமெனக்கு விழைந்தவளே!!
நீர்குடித்துப் பாற்சோறு!
நிதமெனக்குத் தந்தவளே!!
சீர்கொடுத்துச் சினந்தாங்கிச்!
செய்தபிழை மறந்தவளே!!
யார்கழித்துப் பேசிடினும்!
எனைஉயர்த்தி நின்றவளே!!
வேர்எனவே எனைப்பிடித்து!
வெளித்தெரியா திருப்பவளே!!
ஊர்தெரியச் சண்முகமாய்!
உள்ளழுது வாழ்பவளே!!
சார்ந்திருக்க மறுத்தவனின்!
சரித்திரத்தின் முதலெழுத்தே!!
தீர்ந்தெனது நாள்முடிந்து!
தேவனிடம் சேருகையில்!
நேர்ந்திடப்போம் தண்டனையை!
நீகுறைக்க வேண்டம்மா

சிரிக்கும் சிலை

கலாதர்.அ
உம் சினத்தை
பலத்தினால் செதுக்கினாய்..
யாமோ சிரிக்கும் சிலையானோம்.

தொடரும் உரையாடல்

இரா. பி
மறுபடியும் உயிர்த்தெழுந்து!
உணர்வுகளின் ஒரு பகுதியில், உறவுகளுடன்!
ஒரு உரையாடல் கொண்ட!
கண நேரத்தில்!
காலன் தவறை உணர!
பலியான கனவு !
தொலைந்தது எதுவோ!
தொலைத்தவர் எவ்வழியோ!
வாழ்க்கையை தொலைக்க முயன்று!
தொலைந்த நிழல் !
தொலைந்த தோற்றம் தேடி!
தொடர்ச்சி, தோல்வி அல்ல!
தொடரும் பயணமே முடிவு !
உண்மை தெளிய, எதுவும் அன்றி பொய்யாக!
விழிப்பின் விளிம்பில் ஒரு உரையாடல்!
எவரிடமோ என்பதல்லாமல், பயணங்கள் தெளிவற்று!
வெளிச்சத்தில் நிலையற்று, இருட்டின் தேடலில்!
மறந்து போன, மறைக்க நினைத்த!
வாழ்வின் முடிவில் மரணம்

இயலாமை

இரா. பி
கண் முன்னே கொடூரங்கள்!
அன்றாட வாழ்வில் அத்தியாயமாகி!
இயலாமை எனும் அரணின் பின் மறைந்து!
இரக்கம் ஒரு சொல்லாக!
நீதி ஒரு துணுக்காக!
மனிதம் ஒரு புறம்; மனிதன் மற்றொரு புறம் !
காலத்தின் போக்கில் வாழ்வைக் களித்து!
அநீதி கண்டு பொங்கி எழுவது அநீதி என்று!
நீதி அளக்கும் தராசில்!
ஒரு புறம் கனம்; மறுபுறம் கனக்கும் மனம் !
எப்போதாவது என ஒரு சொல் சாபத்துடன்!
வாழ்வில் முற்றுப்புள்ளி அற்று!
தொடரும் பல சாபங்கள்!
இயலாமைதான் வாழ்க்கையோ?!

பயணம்

இரா. பி
காலத்தின் படிகளில் பின்னோக்கிச் சென்று!
உற்று நோக்கி, உண்மையான உருவத்தை!
ஒரு கேள்வி கேட்க!
கண் விழித்து!
கனவுகளைத் தொலைத்து!
தொடங்கும் ஓர் ஆன்மீகப் பயணம் !
நிகழ்கால என்னை, கடந்த கால நான்!
எதிர் கொண்டு,!
பேசத் தயங்கி,!
உள்ளம் நடுங்க,!
கேட்ட ஒரே கேள்விக்கு விடை என்ன?!
எங்கே என்னைத் தொலைத்தாய்? !
விடை தேடி மீண்டும் தொடங்கும்!
ஆத்மார்த்த யாத்திரை!
கட்டுங்கடங்காத காலம்!
எட்டுத்திக்கிலும் எண்ணம்!
தட்டுத்தடுமாறி தொடங்கிய!
வாழ்வின் முடிவில் பயணம் !
எவனோ ஆகும் முயற்சியில் முதல் தோல்வி!
இவனோ எனும் கேள்விக்கு விடை தேடி!
அவனும் அப்படித்தான் எனும்!
சமூக விதிக்குட்பட்டு!
வரையறை தாண்டியவர் கண்டு பெருமூச்சு விட்டு!
இதுதான் எனும் தொடக்கத்தில் முடிவுறும் பயணம்!

நம்பிக்கை

இராமதனவந்தினி
கண்களின் கனம் தாங்க
முடியாமல்
கண் இமைகள் கூட
பலமுறை கீழ் விழுந்து தான்
மேல் எழுகிறது...

என் சீருடைப்பிறையே

கிண்ணியா பாயிஸா அலி
சீருடைப்பிறையே!!
எனதில்லத்துமுற்றத்தில்!
நெல்லுமணி பொறுக்கும்!
சின்னச்சிட்டுக் குருவியாய்!
பள்ளிநேரமதில் நீ……!
சாடிகொண்ட செடிமலர்களுக்குள்ளே நெடிய!
வாயுறுப்பிறக்கி அமுதமுறிஞ்சும்!
வண்ணத்துப்பூச்சியே!!
கண்ணாடித்தொட்டியுள் பச்சைப்புழுவாய்!
வளைந்து நெளியும்!
வலிஸ்நேரியப் பற்றைக்குள்!
ஒளிந்து விளையாடும் பொன்மீன்குஞ்சே! !
குப்பை கிளறிக்குறுணல்!
கொறிக்குமென் வெண்கோழிக்குஞ்சே!!
மாடத்து மினாரங்களில்!
சடசடத்துப் பறக்கும் வெள்ளிப்புறாவாய்!
பள்ளி மைதானமதில் படபடத்துத்திரிபவளே!!
சீரூடைப்பருவமதில் நான்!
சுவாசிக்கமுடியாதுபோன!
சுதந்திர வானங்களுக்கான!
அத்தனைசிறகுகளையும்!
மொத்தமாய்விரித்திருக்கிறேன்!
உன்!
இலட்சியத்தேடலுக்காய்!!
புரிந்துகொண்டேன்!
சிரிப்பாலானவளே!!
சீருடைப்பிறையே!!
பேனாபிடித்த உன்!
சின்ன விரலிடுக்கின்!
பெருவெளிகளுக்குள்ளே!
எட்டா முடிவிலித்தூரத்தில்!
விரிந்து வியாபித்துக் கிடக்கின்றன!
சிகரக் கனவுகள்.!
எனவேதான்!
இறைஇறைஞ்சலுக்காய்!
இருகரமுயர்ந்திடக்!
காத்திருக்கிறேனம்மா உன்!
எல்லாவிதத்தேடல்களுக்குமான!
அடைவுமட்டங்களுக்காய்…….!!
என்!
தேர்ர்ச்சித் திட்டங்களோடும்!
உன்னதமான!
தாய்மையின் பரிவுகளோடும்

நகர்வு!

கலாநிதி தனபாலன்
நகரும் போதுதான்!
நதி அழகு!
நடக்கும் போதுதான்!
வாழ்க்கை அழகு!
நடந்தேன் நடந்தேன்…!
ஊரை விட்டு !
உறவை விட்டு!
ஒரு நகர்வு!
நடந்தேன் நடந்தேன்!
ஈழம் விட்டு !
இருந்த சொந்தம் விட்டு!
இன்னொரு நகர்வு!
நடந்து கழைத்து!
நின்று நினைத்துப்!
பெருமூச்சு விட்டேன்!
அப்போது தெரிந்தது!
வாழ்வின் அருமை!
அதற்குள் அடுத்தடுத்த நகர்வுகள்!
காலநதியில் கால்பதித்து!
கல்வி தேவதையோடு!
கைகோர்த்து!
கனதூரம் நடந்தேன்!
ஓரமாய் ஒளிர்ந்தது!
ஒரு புதிய விடியல்!
விடியலைக்கண்டு!
வட்டம் விட்டு!
வெளியே வந்து பார்த்தேன்!
வாழ்க்கை வனப்புடையதாயிற்று!
நடக்கும் போதுதானே!
வாழ்க்கை அழகு!
நம்பினேன் நடந்தேன்!
நடந்தது வாழ்க்கை!
நலமாக.!