ஒற்றுமையின்.. மானஸ்தி அவள் - வித்யாசாகர்

Photo by Sajad Nori on Unsplash

ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது .. மானத்தி அவள்; தமிழச்சி!
!
01.!
ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது!
---------------------------------------------------------------------!
இறந்த போராளிகளின்!
உடல்கள் நைந்துக்கிடப்பதுக் கண்டு!
நெஞ்சு பிளந்தது,!
அருகே நின்று பார்த்தவன் சொன்னான்!
அதலாம் பிணங்களென்று;!
இல்லை.!
பிணங்கள் இல்லை அவர்கள்;!
உயிர் விட்டெரியும் எம்!
விடுதலை தீபங்கள்,!
நாளைய எங்கள் வாழ்வின்!
ஒளியாய் வீசி – உயிர்த்திருக்க காத்திருக்கும்!
தியாக விளக்குகள் என்றேன்; உணர்ச்சிவசப் பட்டு!
அவன் இவ்வுலக மனிதரைப் போலவே!
சிரித்துக் கொண்டே போனான் –!
எனக்குள்ளிருந்த விடுதலையின் தீ!
சுடர்விட்டு எரிந்தது அந்த சிரிப்பில்;!
எரிந்து அனல் பரப்பியது...............!
அதன் அனலில் தகித்து –!
சுதந்திர விளக்குகள் ஒன்றாய் இரண்டாய்!
மூன்றாய் சேர்ந்து – ஒவ்வொன்றாய் கூடி!
மிக ஒய்யாரமாய் ஒட்டுமொத்தமும் எரியத் துவங்கின;!
பரவிய வெளிச்சத்தில் புரிந்தது – நம் வேகத்தை!
எதிராளிதான் வைத்திருக்கிறான் என்று;!
இதோ, இன்று விடுதலைக்கான வெற்றிநெருப்பு!
என் கண்களில் மட்டுமல்ல –!
எல்லோரின் கண்களிலும் மிக நன்றாகவே சுடர்விட்டெரிகிறது!!!
02.!
மானஸ்தி அவள்; தமிழச்சி!
-----------------------------------------!
மண்ணின்!
விடுதலைக்குப் போராடிய!
தமிழச்சியின் நிர்வாணம்!
இணையமெங்கும் ஒளிபரப்பு;!
உயிரிருந்தும் உலவும் நாம் -!
அதை கண்டும் -!
சாகாத; இழி பிறப்பு!!!
மானத்தில் -!
தொட்டால் சுடும் நெருப்பு,!
இழிவாய் -!
பார்த்தாலே பாயும் மின்சாரம்,!
அவள் -!
தாயிற்கும் ஒரு படி மேல் என்று!
இனி புரியும் - சிங்களனுக்கு!!!
அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால்!
ஒன்று பார்த்தவரையெல்லாம்!
எரித்திருப்பாள்,!
அல்லது - தன்னையாவது!
எரித்துக் கொண்டிருப்பாள்!!!
தப்பித் தவறி!
அவள் பிள்ளை இதை!
பார்த்திருந்தால்-!
எத்தனை ராஜபக்ஷேவை அவன்!
கொன்றிருப்பானோ!!!!!!!?!
எம் மண்ணின்; வீரமென்!
தமிழச்சிகள்,!
நாய்கள் கொன்றுவிட்டு தான்!
கொந்தியிருக்கின்றன!!!
ஜென்மம்!
எத்தனை எடுத்தாலும் இனி!
ரத்தத்தின் ஒரு துளியிலாவது!
இருக்கும் -!
அவன் மீதான; அவளின் கோபம்!!
யாரும் சாட்சிக்கு வேண்டாம்!
காற்றும்.. வெளிச்சமும்..!
மண்ணும்.. வானும்..!
மரமும் செடிகளும் -!
பார்த்துக் கொண்டு தானிருந்தன!
அந்தக் கயவர்களை!!!
கடல் தகதகவெனக்!
கொதித்து -!
உலகத்தை சூழ்ந்து அழித்திருக்கும்;!
அந்த கொடுமைக்கு உடனே!
தண்டனை கொடுப்பதெனில்!!!
யாரோ ஒருவனுக்கு!
துணிவிருந்தால்!
அவள் கையில் ஒரு அரிவாளை!
கொடுத்துவிட்டு சொல் -!
உன்னை இப்படிச் செய்வேனென்று;!
அந்த அரிவாளில் -!
உன்னைப் போல் - அவள்!
நூறு பேரை அறுத்திருப்பாள்!!!
எனக்கு!
மரணத்தை இபொழுதேக் கொடு;!
அதற்கு ஈடாக -!
இணையத்தில் தெரிந்த!
என் தமிழச்சியின் வெற்றுடம்பை!
ஈழ விடுதலையால் போற்று,!
இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.