முதிர் கன்னர்.. கொஞ்சம்..வாழ்க தமிழ் - வித்யாசாகர்

Photo by Yender Fonseca on Unsplash

முதிர் கன்னர்கள்.. கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. வாழ்க தமிழ் பேசுவோர்..!
01.!
முதிர் கன்னர்கள்..!
--------------------------!
அவர்கள் முப்பதைக் கடந்தவர்கள்!
நாற்பதைத் தொட்டவர்கள்!
சாபமின்றி வாழ்க்கையை!
நாளும் தொலைத்தவர்கள்..!
மணக்கும் மல்லிகையின்!
வாசம் ரசிப்பவர்கள்,!
மணக்கா பெண்ணெண்ணி கனவினுள்!
வீழ்ந்தவர்கள்,!
கடவுளை கைதொழா!
காதலின் பக்தர்கள்!
காலில் உதைத்து கடவுளையும்!
சலிப்பவர்கள்;!
கோவிலே கதியென்று!
நாளும் திரிபவர்கள்!
காட்சிகளின் மாட்சியில்!
குடும்பத்தைப் பார்ப்பவர்கள்;!
வாழ வரும் பெண்ணுக்குக்கூட!
வரையறை வைத்திருப்பவர்கள்!
வாழும் வாழ்க்கையை!
விரையமாக்கி வாழும்போதே நொந்தவர்கள்;!
காலநேரம் ராசி பார்த்து!
சோடைபோன சங்குமலர்கள்!
அழகாய்ப்பூத்தும் கசங்கிப்போன!
தெருஓர பிஞ்சுமலர்கள்;!
தங்கைக்கும் தமக்கைக்கும்!
வாழ வழிவிட்டவர்கள்!
பின் அவள்பெற்றப் பிள்ளைக்கும்!
காவலிருந்தவர்கள்;!
வீட்டைக் காப்பதையே!
நாட்டிற்கு ஈடாக எண்ணிப் பயந்தவர்கள்!
படு தீவிரமாகக் கணக்குபோட்டு!
வாழ்க்கையின் பாதியைக் கடந்தவர்கள்;!
பாவம் ஆண்களிலும் உண்டிப்படி !
முப்பது நாற்பதிலும் முதிர்கன்னர்கள்'!
முயன்று கட்டும் தாலியில் உலகத்தீரே!
கொஞ்சம் ஆண்களையும் பாருங்கள்; நம்!
அண்ணன்தம்பிகளும் வாழட்டும்!!!
02.!
கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை..!
--------------------------------------------------------------!
சாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே!
தெரிகிறதந்த உலகம்;!
உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன்!
அங்கே தமிழை!
ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம்!
முதலாய்ச் சபிக்கிறேன்,!
சபித்த மனம் சற்று நடுநடுங்க -!
உணர்வூசி வைத்து!
இதையமெங்கும் குத்துகிறேன்,!
உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து!
என் முகத்தில் காரி உமிழ்கிறது’!
மானங்கெட்ட மனிதனே என்கிறது’!
சுயநலவாதி சாவேன்’ வாழ்ந்தென்ன சாதித்தாய் என்கிறது;!
ரத்தம் சொறியச் சொறிய –!
நெடிகூடிய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டு!
எனக்குள்ளிருக்கும்!
கொஞ்சமனிதத்தின் மெச்சுதலில்!
மார்பு புடைக்கிறேன்;!
“த்தூ,, அடிமை நாயே” என்றொரு குரல்!
யாரது என்று கேட்பதற்குள் –!
தண்ணீர் மறுப்பவனைத் தட்டிக்கேட்கமுடியாத!
அசுரக் கைகள்!
அரசின் சாய்ந்தத் தராசுக் கொண்டு!
தலையில் அடிக்கிறது!
அடியைத் தாளாது விளக்கம் கேட்டால்!
தீவிரவாதி என்கிறது சுற்றம்,!
யார் நானா ?!
தமிழரா தீவிரவாதி என்பதற்குள்!
“புறத்துப் போய்க்கோ” என்று நெட்டித்!
தள்ளியதின்னொரு கை,!
சமாளித்து எழுவதற்குள்!
ஜாதியை ஒரு புறமும்!
மதத்தையொரு புறமும் கொண்டுவந்து –!
எனது முதுகைப் பார்த்துக் குத்தியது என்னினம்,!
உரக்க’ அப்போதும் கத்துகிறேன் –!
“நான் யார் தெரியுமா(?)” என்கிறேன்!
ஹ.. ஹ என்று.. எல்லோரும் எனைச் சுற்றி நின்று!
கத்தியவாறே சிரிக்கிறார்கள்,!
அவர்களின் வாயையடைக்க!
எனக்கு இன்னொரு விதை தேவைப்பட்டது!
விதைத் தேடி அலைகிறேன்,!
நான் இதோ.. நான் இதோ.. என்கிறார்கள் யார் யாரோ..!
யாரைக் கேட்டாலும் மந்திரி!
யார் வேண்டுமானாலும் ராஜா!
நினைத்தவனெல்லாம் தலைவன்!
எது வேண்டுமோ கிடைக்கும் லஞ்சமிருக்கா (?)!
என்கிறார்கள்;!
லஞ்சமா (?)!!!
லஞ்சம் தீதென்கிறேன்!
நியாயம் பேசினால் ராஜா மந்திரியெல்லாம்!
எப்படி வரும் ?!
அரசியலில் எப்படி நிலைப்பது ?!
போ’ களவு, பொய், பொறாமையெல்லாம்!
கற்று வா என்கிறார்கள்;!
இல்லையில்லை நீ!
தவறாகப் பேசுகிறாய்!
பொய் தீது; பொறாமை விஷம்!
களவு செய்பவன் தலைவனானால்!
தேசம் மதிப்பாரற்றுப் போகும்’ எனக்கு அதலாம்!
வேண்டாம்!
ஒழுக்கம் போதும்!
உயர்ந்த தேசதிற்கு வழி சமைக்கும்!
ஒரு மனிதர் போதுமென்கிறேன்,!
அந்தச் சாவிதிறக்கும்!
சிறுதுவாரத்தின் வழியேயொரு!
மோதிரக் கைவந்து!
என் முகத்தில் ஓங்கிக் குத்துகிறது,!
உனக்கு ராஜா இல்லை!
மந்திரியுமில்லை!
நாசமாகப் போ’ என்கிறது அந்தக் கை;!
எனக்கு ராஜாக்கள் வேண்டாம்!
திருத்தம் போதாத மந்திரிகள் வேண்டாம்!
இனி – விதைகளே தேவையென்றேன்..,!
விதைகளிட்டால் விளைவதுபோல் பெருகும்!
என் இளைஞர்கள் வேண்டுமென்றேன்,!
அவர்களுக்கு அதலாம் கேட்டிருக்காது!
நானும் கேட்பதை நிறுத்துவதாயில்லை!
எனக்கு விதைகளே வேண்டும்;!
இன்னுமொரு விதை!
இன்னுமொரு விதையென!
எனக்கு எனை –!
நானாக அறிவிக்கும் அந்தவொரு விதை வேண்டும்!
எனது இனத்தை யாரென்று உணர்துமந்த!
விதை வேண்டும்;!
அந்த விதை ‘புரட்சியோ!
மாற்றமோ!
புதுமையோ!
எதனால் வேண்டுமோ கிடைக்கட்டும்,!
அது கிடைத்தப் பின்’ எனை யாரும்!
அடிமையென்று சொல்லாதிருந்தால் அதுப் போதும்..!
03.!
வாழ்க தமிழ் பேசுவோர்!
------------------------------!
வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத்!
துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை..!
அம்மா அப்பா மாறி!
மம்மி டாடியானது மட்டுமல்ல!
டிவி ரேடியோ கூட வெகுவாய்!
தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது;!
சுடுகாட்டுப் பிணத்தைக் கூட!
டெட்பாடி ஆக்கும் ஆசையை!
எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால்!
என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க!
தமிழாகித் தொலையுமோ... (?)!
எவனோ எடுத்தெமைப்!
புதைக்கும் குழிக்குள்!
தமிழ்தொலைத்து தொலைத்து!
விழும் மாந்தரை!
எந்த மொழி மனிதரெனயெண்ணி!
மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ?!
பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும்!
பேஸ்புக் பிசாவும் கூட!
மாற்றத்தின் புள்ளிகளுக்குள் அடங்கிய!
காலமாற்றத்தின் காட்சிகளாகிப் போகட்டும்!
பெயர்ச்சொல்லாய் வாழட்டும்!
மீறி மொழியைத் தொலைப்பதையோ – பாதி குறைத்து!
தங்க்லிஷ் எழுதுவதையோ!
நியாயமென்றுரைப்போர் நஞ்சினை –!
எந்த வாளிட்டு அறுப்பது?!
ஆங்கிலம் முக்கியம்!
அரபுமொழி முக்கியம்!
அந்நிய மொழிகள் முக்கியம்!
அதையெலாம் அதுவாகப் பேசுவதுபோல்!
தாய்மொழியும்!
தமிழர்க்கு அழகில்லையா ?!
மானம் போயின் தெருவில் பிணமான!
இனத்திற்கு!
தனதானமொழி தமிழது முகம் தொலைக்குமெனில்!
சினமின்றி எழுதும் கவிதையும் தீதன்றோ ?!
எனவே -!
எனவே உறவுகளே..!
அங்கமங்கமாக பிறமொழி கலந்து குழந்தைக்கு!
மில்கோடு ஹாட்கப்பில் தருவோரே,!
தமிழை தினம் தினம் பிளேட்டில்!
ரைசோடு போட்டுக் கொல்வோரே..!
இனி -!
கொஞ்சம் கொஞ்சமாக தனை மாற்றுங்கள்!
தமிழையினி யேனும்!
அழகு கொஞ்சப் பேசுங்கள்;!
மொழி நமக்கு உயிராக வேண்டாம்!
மொழியாகவே இருக்கட்டும்!
முழுதாகப் பேசமட்டும் முப்பொழுதும் கிடைக்கட்டும்!
வாழ்க தமிழ் பேசுவோர்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.