விழியில் விரியும்.. விலகி நடந்தது - வேலணையூர்-தாஸ்

Photo by engin akyurt on Unsplash

விழியில் விரியும் கனவுகளோடு.. !
விலகி நடந்தது காதல்!
01.!
விழியில் விரியும் கனவுகளோடு!
-----------------------------------------!
விழியில் விரியும் கனவுகளோடு!
காத்திருக்கிறேன்!
இதயவாசல் இன்னுமேன் அடைத்திருக்கிறாய்!
நான் உனக்காக தினமும் மலரும்!
தாமரை!
சூரியன் நீ தான் கண்டு கொள்வதில்லை.!
மல்லிகையாக புன்னகைக்கிறேன்!
அலரிப்பூவாக அலட்சியம் செய்கிறாய்!
உதயத்தை எதிபாத்து காத்திருக்கிறேன்.!
அஸ்தமனங்களை அறிமுகம் செய்கிறாய்.!
என் காதல்பாடல்களில்!
முகாரியை சேர்க்க ஏன்!
ஆசைப்படுகிறாய்.!
உன் நினைவுகள் மட்டும்!
பனிக்காற்றாய்!
ஆனால் நிஜமோ பாலை வெயிலாய்!
தகிக்கிறது.!
காற்றாய் மாறி உன் மூச்சாக மாட்டோனா.!
உன் கையில் சிறையாகி!
காதலில் கரையேனா.!
என்னை தவிர்கிறாய்!
என்பதை உணர்கிறேன் அன்பே!
ஆனால்!
உன்னையே எண்ணி!
உருகும் என் நெஞ்சு..!
!
02.!
விலகி நடந்தது காதல்!
-------------------------------!
உன் நினைவுகள் உருகி!
கண்களின் வழியே வடிந்து கிடந்தது கண்ணீர்.!
கண்ணீர் துடைத்திட விரையும்!
உன் விரல் தேடி காற்றில் அலைந்தது மனது!
கனவுகள்மட்டும் மனதினில் நிறைத்து விலகி நடந்தது காதல்!
துயரினில் தோயும் பெண்நிலை கண்டு!
தூர இருந்தது நிலவு
வேலணையூர்-தாஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.