2013... - ரவி (சுவிஸ்)

Photo by engin akyurt on Unsplash

இலையுதிர்கால ஓவியர்கள் தீட்டிச்சென்ற !
ஓவியங்கள் உருவழிந்துபோன !
வரலாற்றை பனிக்கால தேவதைகள்!
நிலமெங்கும் மலையெங்கும்!
ஏன் மரமெங்கும்கூட அவசரமாய்ச்!
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். !
அவர்கள் திரும்பிப் போய்விடவேண்டும்.!
நதியிடம் சொல்லி !
அல்லது சொல்ல முயற்சித்து!
மறைந்துபோகின்றனர் அவர்கள்.!
எனது கடந்தகாலத்தின் சிதறல்களை!
அதன் துகள்களைக்கூட இந்த நதியின் !
இரைச்சல்களிடம் வீசியெறிகிறேன்.!
அது திரண்டு திரண்டு அழிகிறது.!
முகில்களின் மடியினில் கிறங்கிப்போன !
நதியைப் பெயர்த்துவிட்டு!
நான் புகுந்து, இப்போதான்!
நாளிகையாகிப் போயிருக்கலாம் !
அல்லது !
பல மணி நேரமாகவும் இருந்திருக்கலாம்.!
நான் இறகாகிப் போய்!
பறவையொன்றை வெளியெங்கும் !
மிதக்கவிட்டிந்தேன். !
பின்னொருநாள்!
முகில் கோதியுதிர்த்த என்; துளிகளில்!
நனைந்து சுகம் கண்டாள் என்னவள்!
நதியிலும் விழுந்தன என் துளிகள்.!
ஈரத்தின் குருத்துகளில் வழிந்த!
நிறங்களையெல்லாம்!
அவள் கூந்தலின் நுனிகள்!
எதற்காக சேர்த்து வைக்கின்றன.!
ஒருவேளை !
உருவழிந்த நம்பிக்கைகளை !
வழமைபோல் மீண்டும்!
ஓவியமாய் அவள் வரைதல்கூடும். !
அதன் தொகுப்பை!
2013 என பெயரிடவும் கூடும்.!
ரவி (சுவிஸ்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.